செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

வன்முறை, கலவரம், தீவைப்பு கொந்தளிப்பில் இலங்கை...!

May 09, 2022 09:40:04 PM

லங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகிய நிலையில், அவரது ஆதரவாளர்களுக்கும், ஆட்சிக்கு எதிராக போராடியவர்களுக்கு இடையே மோதல் மூண்டது. இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் பல ஊர்களில் ஆளும் கட்சியினரின் வீடுகள், அலுவலங்களுக்கு தீ வைத்தனர். 

இலங்கையில் கொழும்பு நகரில் அதிபர் மாளிகைக்கு எதிராக உள்ள காலிமுகத்திடலிலும், பிரதமர் இல்லமான அலரி மாளிகைக்கு எதிரிலும் கடந்த பல நாட்களாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். இதற்கான கடிதத்தை அவர், அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அனுப்பினார்.

மகிந்த பதவி விலகியதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் அலரி மாளிகை முன்பு திரண்டனர். அவர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அங்கிருந்த கூடாரங்களை கிழித்து, தீவைத்து எரித்தனர்.

இதேபோல காலி முகத்திடலிலும் போராட்டக்காரர்களின் கூடாரங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.

ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் மீது பல இடங்களில் தாக்குதல்கள் நடைபெற்றன. பல ஊர்களில் இருந்து ராஜபக்சே ஆதரவாளர்கள் கொழும்புவுக்கு வந்த பேருந்துகள் அடித்து, நொறுக்கப்பட்டன.

காலிமுகத்திடல் அருகே உள்ள பெகீரா குளத்திற்குள் ஆளும் கட்சியினரை தள்ளி விரட்டி தாக்குதல் நடைபெற்றது. இதனிடையே காலிமுகத்திடலுக்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவின் காரும் தாக்கப்பட்டது.

இதனிடையே, நிட்டம்புவையில் போராட்டக்காரர்கள் அந்த வழியாக வந்த நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் காரை வழிமறித்து தாக்கினர். கூட்டத்தினரிடம் இருந்து தப்பிக்க, அமரகீர்த்தி, தமது கைத்துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் கூறியுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்தார் 5 பேர் காயமடைந்ததை கண்டவர்கள் ஒன்று திரண்டு தாக்கத் தொடங்கினார். இதனால் பயந்து போன எம்.பி, அருகில் இருந்த கட்டிடம் ஒன்றில் தஞ்சமடைந்தார். அக்கட்டிடத்தையும் போராட்டக்காரர்கள் சூழந்ததால், அவர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்தகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே மொரட்டுவா மற்றும் குருனேகலா,பந்தரவாலா நகர மேயர்களின் வீடுகளை போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். முன்னாள் அமைச்சர்கள் ஜான்சன் பெர்ணான்டோ, ராமேஷ் பத்திரனே, நிமல் லன்சா, எம்.பிக்கள், அருண்டிகா பெர்ணான்டோ,சனத் நிஷ்கந்தா ஆகியோரின் வீடுகளும் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இலங்கையில் முன்னாள் அமைச்சர் ஜான்சன் பெர்ணான்டோவின் கட்சி அலுவலகத்திற்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.இதனிடையே நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிபர் கோத்தபய ராஜபக்ச, அனைத்து குடிமக்களும் அமைதியாகவும் நிதானமாகவும் இருக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.


Advertisement
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
உக்ரைன் போரை நிறுத்த அந்நாட்டுக்கான ஆயுத உதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் - ரஷ்யா
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
பாடகர் மனோவின் மகன்களை தாக்கியதாக 8 பேர் மீது வழக்குப்பதிவு
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி

Advertisement
Posted Sep 21, 2024 in சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி


Advertisement