மும்பையில் ரயில்வே பாலத்தில் கன்டெய்னர் டிரக் ஒன்று சிக்கிக் கொண்டதால் அவ்வழியாக இயங்கும் வாகனப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள King's Circle ரயில்வே பாலத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. டெல்லியில் இருந்து புறப்பட்டதாகவும், முதன்முதலாக இந்த வழியில் டிரக்கை ஓட்டிச் சென்றதால் ரயில்வே பாலத்தின் உயரத்தை பற்றி தம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் டிரக் ஓட்டுனர் தெரிவித்தார்.
பாலத்தின் அடியில் சிக்கி உள்ள டிரக்கை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.