செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

இந்தியா - டென்மார்க் இடையே புதிய ஒப்பந்தங்கள்

May 03, 2022 07:51:48 PM

இந்தியா - டென்மார்க் பிரதமர்கள் முன்னிலையில், இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகத்துறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், டென்மார்க் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.  

பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளுக்கும் மூன்று நாள் சுற்றுப் பயணமாகச் சென்றுள்ளார். தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி பயணத்தின் முதற்கட்டமாக ஜெர்மனியில் அதிபர் ஒலாப் ஷோல்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனை அடுத்து, ஜெர்மனியில் இருந்து டென்மார்க் புறப்பட்ட பிரதமர் மோடியை சந்திக்க பெர்லின் நகரில் ஏராளமான வெளிநாடு வாழ் இந்தியர்கள் குவிந்தனர். அங்கு, குழந்தைகளிடம் கொஞ்சி பிரதமர் மோடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில், இரண்டாம் நாள் பயணமாக டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனுக்கு சென்ற பிரதமர் மோடியை விமான நிலையத்திற்கே வந்து அந்நாட்டு பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் வரவேற்றார். அங்கு பிரதமருக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் மேளம் வாசித்து உற்சாகமாக வரவேற்பளித்தனர்.

கோபன்ஹேகனில் அந்நாட்டு பிரதமர் மெட்டே பிரடெரிக்சனின் வீட்டிற்கு சென்ற பிரதமர் மோடி அவருடன் சந்தித்து பேசினார். இரு நாட்டு உறவை வலுப்படுத்தும் வகையில் தலைவர்கள் இருவரும் புல்வெளியில் நடந்து கொண்டே தங்களது கருத்துகளை பரிமாறினர்.

இதனை தொடர்ந்து, பிரதமர் மோடி மற்றும் டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் தலைமையில் பிரதிநிதிகள் அடங்கிய இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. திறன் மேம்பாடு, கால நிலை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்ளிட்டவை தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்தியா - டென்மார்க் இடையே இரு நாட்டு பிரதமர்களின் முன்னிலையில் வணிகத்துறை, நீர்வளத்துறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, டென்மார்க் நிறுவனங்களுக்கு, இந்தியாவின் உள்கட்டமைப்புத் துறையில் முதலீட்டுக்கான அதிக வாய்ப்புகள் உள்ளன என்றார். இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான நட்புறவு, இந்தோ - பசிபிக் மற்றும் உக்ரைன் விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை விரைவில் முடிவடையும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். உக்ரைனில் உடனடி போர்நிறுத்தம் ஏற்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்றும் கூறினார்.

இதனை அடுத்து பேசிய டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன், இந்தியா - டென்மார்க் இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார். டென்மார்க் , இந்தியா இடையிலான புதுப்பிக்க வல்ல ஆற்றல் தொடர்பான பசுமை கூட்டணியை உறுதியாக்கும் வகையில் வேகமாக முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், உக்ரைனில் மக்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் மனிதாபிமான நெருக்கடியின் விளைவுகள் குறித்து பிரதமர் மோடியுடன் விவாதித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.


Advertisement
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பள்ளிக்கூட வாசல்களில் கஞ்சா மிட்டாய்கள் விற்கப்படுகின்றன - செல்லூர் ராஜு
நெய்வேலியில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 20% போனஸ் கேட்டு தர்ணா

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement