செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

ராஸ்னெஃப்ட் நிறுவத்தின் 19.5 சதவிகிதம் பங்குகளை கைவிடுவதாக BP நிறுவனம் அறிவிப்பு

Apr 29, 2022 06:59:15 PM

ராஸ்னெஃப்ட் ரஷ்ய எண்ணெய் நிறுவனத்தின் கைவிடப்பட்ட பங்குகளை வாங்கும் சாத்தியங்களை ஆராயும்படி இந்திய எண்ணெய் நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கச்சா எண்ணெய் இறக்குமதியில் உலகின் 3-வது பெரிய நாடாக உள்ள இந்தியா, நாள் ஒன்றுக்கு தேவைப்படும் 50 லட்சம் எண்ணெய் பேரல்களில் 85 சதவீதத்தை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்து வருகிறது.

உக்ரைன்  மீதான போர் காரணமாக ராஸ்னெஃப்ட் எண்ணெய் நிறுவனத்தில் வைத்துள்ள 19.75 சதவீத பங்குகளை கைவிடுவதாக லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், அந்த பங்குகளை வாங்கும் சாத்தியங்களை ஆய்வுசெய்யும்படி ஓ.என்.ஜி.சி, இந்தியன் ஆயில் கார்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், கெயில் உள்ளிட்ட நிறுவனங்களிடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

அதேபோல கிழக்கு ரஷ்யாவில் Sakhalin என்ற திட்டம் மூலம் இயற்கை எரிபொருள் எடுக்கும் அமெரிக்காவின் எக்ஸான் மொபில் நிறுவனத்தின் 30 சதவீத பங்குகளை வாங்கவும் பரிசீலிக்க ஓ.என்.ஜி.சி-யை மத்திய அரசு கேட்டுள்ளது.

பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தை போல  எக்ஸான் மொபில் நிறுவனமும் தன் ரஷ்ய நிறுவனங்களில் உள்ள பங்குகளை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், பேச்சுவார்த்தை மூலம் குறைந்த விலையில் அந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்க இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Advertisement
கஞ்சா போதையில் இருந்த மாணவர்களை தட்டிக்கேட்ட அ.தி.மு.க. பிரமுகருக்கு அரிவாளால் வெட்டு... மாணவன் உள்பட 2 பேர் கைது
கோவளத்தில் சி.சி.டி.வி பொருத்தப்பட்டது தெரியாமல் மீன் திருடி விற்பனை செய்து வந்த 2 திருநங்கைகள்
போலி சான்றிதழ்கள் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது
''மக்களிடையே பிளவை ஏற்படுத்த விரும்பும் காங்கிரஸ் கட்சி" - பிரதமர் மோடி
கூலித் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு.. சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்
பாதுகாப்பு பணியின் போது ரம்மி விளையாடிய காவலர்
"ஹரியானா தோல்வியிலிருந்து காங்கிரஸ் தலைவர்கள் பாடம் கற்க வேண்டும்" தலைக்கனமும், ஆணவமுமே காங்கிரஸ் தோல்விக்கு காரணம் - சாம்னா நாளிதழ் விமர்சனம்
காசா, லெபனானில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டும் - குட்டரெஸ் வலியுறுத்தல்
திருச்சூர் அருகே வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து வீட்டுச் சுவரில் மோதி விபத்து
செங்கல்பட்டு ஸ்னோ வேர்ல்ட் அரங்கில் இயந்திரத்தில் சிக்கி துண்டான சிறுவனின் விரல்கள்

Advertisement
Posted Oct 10, 2024 in தமிழ்நாடு,Big Stories,

குடிகார நண்பரிடம் பைக்கை கொடுத்த பாவத்துக்கு பழுத்தது 24 ஆயிரம் ரூபாய் தண்டம் ..! தவிப்புக்கு ஸ்ரிக்ட் போலீசும் காரணம்

Posted Oct 10, 2024 in இந்தியா,Big Stories,

சந்து, பொந்தெல்லாம் பணம்... லஞ்சம் வாங்கி குவித்த மனைவி... வீடியோவுடன் அப்ரூவர் கணவர்...

Posted Oct 10, 2024 in தமிழ்நாடு,Big Stories,

சாலையில் வழுக்கி விழுந்த சென்னை ஐ.டி பெண் ஊழியர் தலை சிதறி பலியான சோகம்..! சாலைகளை சரி செய்வது எப்போது ?

Posted Oct 09, 2024 in சென்னை,Big Stories,

ரூட்டு தல.. வெட்டி பந்தா.. கெத்து காட்ட.. வெத்து ரீல்ஸ்.. மாணவர் கொலை பின்னணி.... காலமெல்லாம் அடிமையாகவே இருக்கனுமா ?

Posted Oct 09, 2024 in தமிழ்நாடு,Big Stories,

பள்ளிக்கு சைக்கிளில் சென்ற 7 ஆம் வகுப்பு மாணவர் கால்வாயில் விழுந்து பலி..! ஆற்றில் இருந்து சடலம் மீட்பு


Advertisement