குஜராத்தில் ராமநவமி விழாவின்போது கலவரத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகள் இடித்து தள்ளப்பட்டன.
குஜராத் மாநிலம் அனந்த் மாவட்டத்தில் உள்ள கம்பட் பகுதியில் நடைபெற்ற ராமநவமி விழாவில், கலவரம் வெடித்தது. வன்முறையில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்த போலீசார், முன் கூட்டியே திட்டமிட்டு கலவரத்தை நடத்தியதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில், கைதானவர்களின் வீடுகளை அனந்த் மாவட்ட நிர்வாகம் புல்டோசர் மற்றும் பொக்லைன் இயந்திரங்களை கொண்டு இடித்துத் தள்ளியது. மின் இணைப்புகளையும் துண்டித்தது. அவை, ஆக்கிரமிப்பு சொத்துகள் எனவும் விளக்கம் அளித்துள்ளது.