டெல்லியில் சாலையில் நடந்து சென்றவர்களிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
விவேக் விஹார் பகுதியில் 2பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2பேரில் ஒருவன் தன்னிடம் இருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டி அவர்கள் அணிந்திருந்த நகைகள், பணத்தை கொள்ளை அடித்தான்.
பின்னர் 2பேரும் தாங்கள் வந்த வாகனத்தில் ஏறி தப்பிச் சென்று விட்டனர். இந்த காட்சிகள் யாவும் அங்கிருக்கும் சிசிடிவியில் பதிவாகி உள்ளது.