செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

ஹோலி திருநாளையொட்டிக் கோவிலில் வழிபட்டும் வண்ணப்பொடிகளைத் தூவியும் பொதுமக்கள் கொண்டாட்டம்.!

Mar 18, 2022 05:39:01 PM

நாடு முழுவதும் இன்று ஹோலி திருநாளையொட்டிக் கோவிலில் வழிபட்டும் வண்ணப்பொடிகளைத் தூவியும் பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஹோலித் திருநாளையொட்டிக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

ஹோலித் திருநாளையொட்டி மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனியில் உள்ள மகாகாளேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

உத்தரப் பிரதேசம் மதுராவில் பிருந்தாவனத்தில் உள்ள பங்கி பிகாரி கோவிலில் ஹோலியையொட்டி ஏராளமானோர் சிறப்பு வழிபாடு நடத்தினர். ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளைப் பூசி வாழ்த்துத் தெரிவித்தனர்.

குஜராத்தின் வதோதராவில் உள்ள பள்ளியில் மாணவர்கள் ஆடிப் பாடியதுடன் பூக்களை அள்ளி வீசிக் கொண்டாடினர்.

கொல்கத்தாவில் ஹோலிக் கொண்டாட்டமாக மக்கள் ஒருவர் மீது ஒரு வண்ணப்பொடிகளைப் பூசி மகிழ்ந்தனர். பண்பாட்டுச் சிறப்பை எடுத்துக் கூறும் வகையில் இசையுடன் கூடிய பாடல்களுக்குப் பெண்களும் சிறுமியரும் நடனமாடி மகிழ்ந்தனர்.

ராஜஸ்தானின் ஜெய்சல்மீரில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் ஆடிப் பாடி ஹோலி கொண்டாடினர்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் ஹோலி கொண்டாடினார். இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் சிம்லாவில் உள்ள அவரது இல்லத்தில் ஹோலி கொண்டாடினார்.

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் மக்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளைப் பூசிக் கொண்டாடினர். 

அசாமின் குவகாத்தியில் பாட்டுக்கும் தாளத்துக்கும் ஏற்றபடி மக்கள் நடனமாடி மகிழ்ந்தனர். 

மகாராஷ்டிரத்தின் புனேயில் சிறார்கள் தண்ணீர் தெளிக்கும் துப்பாக்கிகளைக் கொண்டு விளையாடினர்.  

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் ராணுவ வீரர்களுடன் சேர்ந்து பொதுமக்களும் நடனமாடினர். ஸ்ரீநகரில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் நடனமாடி மகிழ்ந்தனர்.

தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் ராஜஸ்தான் சமூகத்தினர் ஒன்று சேர்ந்து ஹோலியைக் கொண்டாடினர்.

குஜராத்தின் அகமதாபாத்தில் மக்கள் வண்ணப் பொடிகளைத் தூவியும், இசைக்கேற்றபடி நடனமாடியும் மகிழ்ந்தனர். 


Advertisement
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பள்ளிக்கூட வாசல்களில் கஞ்சா மிட்டாய்கள் விற்கப்படுகின்றன - செல்லூர் ராஜு
நெய்வேலியில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 20% போனஸ் கேட்டு தர்ணா

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement