தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சென்னையில் இருந்து திருவள்ளூர் வரை சைக்கிளிங் சென்று உடற்பயிற்சி மேற்கொண்டார்.
சென்னையில் இருந்து சைக்கிளில் காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டை சென்று அங்கு மாரத்தான் போட்டியை துவக்கி வைத்த சைலேந்திரபாபு பின்னர் அங்கிருந்து திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை, மணவாளநகர் வழியாக மீண்டும் சென்னையை வந்தடைந்தார்.
இந்த பயணத்தின் நடுவே சாலையோர கரும்பு ஜூஸ் கடையில் கரும்பு ஜூஸ் வாங்கி அருந்திய பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இளைய தலைமுறையினர் தினந்தோறும் 1 மணி நேரமாவது உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தினமும் காலையில் 4 மணி நேரம் உடற்பயிற்சி செய்தால் தான் அலுவலகம் சென்று 12 மணி நேரம் கடுமையாக உழைக்க முடியும் எனவும் அவர் கூறினார்.