உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை கண்டித்து சிங்கப்பூர் அரசு பல்வேறு பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது.
ரஷ்ய வங்கிகளின் செயல்பாடுகளை முடக்குவதாகவும், அதன் மீது பொருளாதார நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் சிங்கப்பூர் தெரிவித்துள்ளது.
மேலும் ரஷ்யாவுக்கான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், கணினி, தொலைத் தொடர்புத்துறை சாதனங்கள், ராணுவ தளவாடங்கள் உள்ளிட்டவைகள் ஏற்றுமதிக்கு தடை வித்ப்பதாக அரசு அறிவித்துள்ளது.
ரஷ்யா சர்வதேச சட்டங்களை விதி மீறில் செய்துள்ளதாகவும், அமைதி போக்கை கடைபிடிக்க வேண்டுமென சிங்கப்பூர் வெளியுறவுத் துறை வலியுறுத்தியுள்ளது.