செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

ரஷ்ய அதிபருக்கு கண்டனம்.. உலக நாடுகளில் போராட்டம்..!

Feb 26, 2022 08:50:12 PM

உக்ரைன் மீது போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு பல்வேறு நாடுகளிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ரஷ்யா அரசுக்கு எதிராக சொந்த நாட்டு மக்களைப் போலவே பிற நாட்டினரும் ஆர்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு ரஷ்யாவிலேயே எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. அதன் எதிரொலியாக மாஸ்கோ, புனித பீட்டர்ஸ்பெர்க் உள்பட 51 நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. தடியடி நடத்தி போராட்டக்காரர்களை அப்புறப்படுத்திய போலீசார் இதுவரை 1,400 பேர் கைது செய்துள்ளனர்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில், பிரதமர் இல்லம் அமைந்துள்ள சாலையில், ஏராளமானோர் உக்ரைன் தேசிய கொடியுடன் திரண்டு ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், அந்நகரின் மையப்பகுதி நோக்கி பேரணியாகச் சென்றனர்.ஸ்பெயின் நாட்டினருடன், அங்கு வசிக்கும் உக்ரைனியர்களும் பேரணியில் பங்கேற்றனர்.

கிரீஸ் தலைநகர் ஏதென்ஸில், ரஷ்ய தூதரகத்துக்கு வெளியே அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய கண்டன பேரணியில் 6,000 பேர் பங்கேற்றனர்.

தைவான் தலைநகரிலும், ரஷ்யா படையெடுப்பை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றன. தைவானை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர சீனா தீவிரம் காட்டி வருவதால், உக்ரைன் விவகாரத்தில் உலக நாடுகளின் நடவடிக்கைகளை தைவான் மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் கனமழையையும் பொருட்படுத்தாமல், ஏராளமானோர் பேரணி சென்றனர். ரஷ்யாவிற்கு உக்ரைன் தக்க பதிலடி தருமாறு அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், ரஷ்ய அதிபர் புடினை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான ரஷ்யர்களும் பங்கேற்று போரை நிறுத்துமாறு தங்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

 

 


Advertisement
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பள்ளிக்கூட வாசல்களில் கஞ்சா மிட்டாய்கள் விற்கப்படுகின்றன - செல்லூர் ராஜு
நெய்வேலியில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 20% போனஸ் கேட்டு தர்ணா

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement