மும்பையில் இருந்து 70 பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தின் எஞ்சின் மூடி, ஓடுபாதையிலேயே கழன்று விழுந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
அலையன்ஸ் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான ATR 72-600 என்ற விமானம், 70 பயணிகளுடன் மும்பையில் இருந்து குஜராத்தின் பூஜ் நகருக்கு புறப்பட்டது.
விமானம் புறப்படும் போதே, எஞ்சினின் மூடி ஓடுதளத்தில் கழன்று விழுந்தது. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் இது குறித்து எச்சரிக்கை விடுத்ததும், ஓடுதளத்தில் கிடந்த விமானத்தின் பாகம் அப்புறப்படுத்தப்பட்டது.
இருப்பினும், விமானம் பாதுகாப்பாக தரையிரங்கிய நிலையில், சம்பவம் குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கண்காணிப்புக் குழு விசாரித்து வருகிறது.