கஜகஸ்தானில் உள்நாட்டு குளறுபடிகள் குறைந்துள்ள நிலையில் புதுப் பிரச்சினையாக ஒருநாள் கொரோனா பரவல் இதுவரை இல்லாத அளவில் 10 ஆயிரத்தை கடந்தது.
எரிபொருள் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டதன் விளைவாக நாளொன்றுக்கு ஆயிரத்து 500 என்ற எண்ணிக்கையில் இருந்த ஒமைக்ரான் பரவல் தற்போது 10 ஆயிரத்து 500ஆக அதிகரித்துள்ளது.
தலைநகர் நுர் சுல்தான், அல்மாட்டி உள்ளிட்ட நகரங்களில் பரவல் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் மருத்துவமனைகளில் விரைவில் படுக்கை தட்டுப்பாடு ஏற்படும் ஆபாயம் ஏற்பட்டுள்ளது.