செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

சென்னையில் முழு ஊரடங்கு: தீவிர வாகனத் தணிக்கை

Jan 09, 2022 04:34:35 PM

முழு ஊரடங்கையொட்டிச் சென்னை மாநகரின் முதன்மையான சாலைகளிலும், சாலைச் சந்திப்புகளிலும் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

சென்னையில் மருந்தகங்கள், பாலகங்கள் தவிர அனைத்துச் சந்தைகளும் கடைகளும் மூடப்பட்டுள்ளன. உணவகங்களில் பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதால் தேவைப்படும் பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர்.

ஆன்லைன் உணவு வழங்கல் சேவை அனுமதிக்கப்பட்டுள்ளதால் இருசக்கர வாகனங்களில் பணியாளர்கள் உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன.

சென்னை அண்ணாசாலை, காமராஜர் சாலை, பெரியார் சாலை ஆகியன வாகனப் போக்குவரத்து இன்றிக் காணப்பட்டன.

சாலைச் சந்திப்புகளில் தடுப்புகள் அமைத்துக் காவல்துறையினர் தணிக்கையில் ஈடுபட்டனர். இன்றியமையாப் பணிகளுக்குச் செல்வோரின் வாகனங்களை மட்டும் அடையாள அட்டைகளைச் சரிபார்த்த பின் அனுமதித்தனர்.

தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தோரை எச்சரித்து அனுப்பினர். அண்ணா சாலையில் வாகனத் தணிக்கை முறையாக நடைபெறுகிறதா எனக் காவல் உயர் அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர்.

எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும் வேளச்சேரி சாலைகள் இன்று வாகனப் போக்குவரத்தின்றிக் காணப்பட்டன.

சோழிங்கநல்லூரில் முழு ஊரடங்கையொட்டிச் சாலையில் வாகனப் போக்குவரத்து இல்லை. இன்றியமையாப் பணிகளுக்குச் செல்வோரின் ஒருசில வாகனங்கள் மட்டுமே இயங்கின.

சென்னை பெரியார் நெடுஞ்சாலையும் வாகனப் போக்குவரத்து இன்றிக் காணப்பட்டது.

எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு முன்னுள்ள சாலையும் ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.


Advertisement
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பள்ளிக்கூட வாசல்களில் கஞ்சா மிட்டாய்கள் விற்கப்படுகின்றன - செல்லூர் ராஜு
நெய்வேலியில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 20% போனஸ் கேட்டு தர்ணா

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement