குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இருந்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளின் கிளியரன்ஸ் இல்லாமலேயே புறப்பட்டுச் சென்றதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
டிசம்பர் 30 ஆம் தேதி நடைபெற்றதாகக் கூறப்படும் இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரு விமானம் புறப்படுவதற்கு முன்பு நகர்வதற்கும் எஞ்சினை ஆன் செய்வதற்கும் பறக்கத் தொடங்குவதற்கும் விமானக் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருந்து பல நிலைகளில் உத்தரவுகளைப் பெற வேண்டியது கட்டாயமாகும்.