செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

ஒமைக்ரான் பாதிப்பு 900.ஐ கடந்துள்ள நிலையில் புதிய கட்டுப்பாடுகள்.!

Dec 30, 2021 04:22:40 PM

இந்தியாவில்  ஒமைக்ரான் பாதிப்பு 900ஐக் கடந்துள்ள நிலையில், புத்தாண்டையொட்டி பல்வேறு மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை கூடுதலாக்கி உள்ளன. 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த இரண்டு நாட்களில் தொற்றின் வேகம் இரு மடங்காக உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, மேற்கு வங்கம், கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தொற்றின் வேகம் அதிகரித்துள்ளது.இந்த நிலையில் ஒமைக்ரான் தொற்றும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தற்போதைய தரவுகளின்படி, ஓமைக்ரான் ஒரு லேசான தொற்று என்றும் ஆக்ஸிஜன் தேவை அவ்வளவாக இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ள டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலேரியா, மருந்துகளை பதுக்கி வைப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் நம்மில் பெரும்பாலானோர் தடுப்பூசி காரணமாகவோ அல்லது இயற்கையான தொற்று காரணமாகவோ நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ள அவர், ஒமிக்ரானைக் கண்டு பயப்பட வேண்டாம் என்றும், ஆனால் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஒமைக்ரான் பரவலைத் தடுக்கும் பொருட்டு இதுவரை 8 மாநிலங்கள் மீண்டும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. கேரளாவில் இன்று முதல் வரும் 2ம் தேதி வரை கொரோனா தடுப்பு விதிகளை கடுமையாக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அரசியல், சமூக மற்றும் மதக் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் பயணத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆபத்தில் உள்ள நாடுகளில் இருந்து வரும் அல்லது பயணிக்கும் பயணிகள் கண்டிப்பாக சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என மேற்கு வங்க, டெல்லி மற்றும் மகாராஷ்டிர அரசுகள் தெரிவித்துள்ளன.


Advertisement
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பள்ளிக்கூட வாசல்களில் கஞ்சா மிட்டாய்கள் விற்கப்படுகின்றன - செல்லூர் ராஜு
நெய்வேலியில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 20% போனஸ் கேட்டு தர்ணா

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement