செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு: விமான நிலையங்களில் தீவிர சோதனை!

Dec 06, 2021 11:43:23 AM

வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பிய 21 பேருக்கு இதுவரை ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், ராஜஸ்தானில் ஒமிக்ரான் உறுதியானவர்களில் 4 பேர் அண்மையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

தென்னாப்பிரிக்காவில் கடந்த மாதம் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பாதிப்பு சுமார் 38 நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்தியாவில் விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்த நிலையில், ஒமிக்ரான் பாதித்த நாடுகளில் இருந்து வருவோர் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப் படுகின்றனர்.

இதனை அடுத்து தலைநகர் டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஒமிக்ரான் பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், மொத்தமாக இந்தியாவில் 20க்கும் மேற்பட்டோருக்கு புதிய வகை தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் 4 பேர் நகரில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. அந்த 4 பேரும் கடந்த மாதம் 25ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்தனர் என்றும் கடந்த 29ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடந்த திருமண விழாவில் அவர்கள் கலந்துகொண்டதாக அம்மாநில சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளது.

மேலும், அந்த விழாவில் கலந்து கொண்டவர்களில் ஒருவருக்கு தற்போது கொரோனா உறுதியாகியுள்ளதாக தெரிவித்த சுகாதாரத்துறையினர், அந்த திருமணத்தில் கலந்துகொண்டவர்கள் குறித்த தரவுகளைச் சேகரித்து அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக குறிப்பிட்டனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் 9 மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது. கர்நாடகாவில் கடந்த ஒரு வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 25 சதவீதம், தெலங்கானாவில் 26 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், அதேபோல் டெல்லி, குஜராத், உத்தர பிரதேசம், கோவா, சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பாதிப்பு சற்று உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
தேயிலை தோட்ட தொழிலாளியை கடித்துக் குதறிய கரடி
தனியார் கிளினிக்கில் தவறான சிகிச்சை.. வயிற்று வலிக்குத் தவறான சிகிச்சை அளித்ததால் இளைஞர் பலி
"இந்திய மண்ணில் தீவிரவாதத்தை புகுத்த மாட்டோம் என உறுதியளித்தால் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் '' - அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
இளம்பெண்ணுடன் போட்டோ எடுத்து வைத்து மருத்துவருக்கு மிரட்டல்.. ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய கும்பலை கைது செய்த போலீஸ்
திருப்பதி லட்டு விவகாரத்தில் பவன்கல்யாண் கருத்துக்கு பிரகாஷ் ராஜ் எதிர்ப்பு
ஹமாஸுக்கு ஆதரவாக செய்தி வெளியிடுவதாக குற்றச்சாட்டு.. 45 நாட்களுக்கு 'அல் ஜசீரா' அலுவலகத்தை மூட இஸ்ரேல் ராணுவம் உத்தரவு
முழுநேர அரசியல்வாதி என இங்கு யாரும் இல்லை - கமல்ஹாசன்
போலியாக பட்டா உருவாக்கி அரசு நிலம் ஆக்கிரமிப்பு.. அ.தி.மு.க பிரமுகர், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு
துப்பாக்கி முனையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் கடத்தல் - துரத்திப்பிடித்த எஸ்.ஐ.
இனி காவிரி நீரை மட்டுமே நம்ப வேண்டியதில்லை.. பண்ணைக் குட்டைகள் மூலம் குறுவை சாகுபடி செய்த முன்னாள் அமைச்சர்

Advertisement
Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி

Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?


Advertisement