தெலங்கானாவில் மொபைல் போன் பறிக்கப்படுவதைத் தடுத்த இளம் நடிகை மர்ம நபரால் தாக்கப்பட்டு காயமடைந்தார்.
இளம் தெலுங்கு நடிகை ஷாலு சவுராஷியா ஹைதாரபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் இரவில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் ஷாலு வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்தான். அதனைக் கொடுக்க ஷாலு மறுக்கவே, அந்த நபர் நடிகையை சரமாரியாக தாக்கியதில் ஷாலுவுக்கு கண் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது.