செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

4 டோல்கேட்டுகளில் சுங்கவசூல் நிறுத்தம்.! பேக்கேஜிங் டெண்டர் நடைமுறை வாபஸ்.!

Aug 27, 2021 09:13:24 PM

சென்னையில், OMRல், மெட்ரோ ரயில் பணி தொடங்க உள்ளதால்,  4 சுங்கச் சாவடிகளில், சுங்க வசூல் நிறுத்தப்படும் என பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார். சாலை பணிகளுக்கு பேக்கேஜிங் முறையில் டெண்டர் விடும் நடைமுறையை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சட்டப்பேரவையில், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, மானியக் கோரிக்கையில், அமைச்சர் எ.வ.வேலு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். மெட்ரோ ரயில் பணிகள் தொடங்க உள்ளதால், ஓஎம்ஆரில் உள்ள 4 சுங்கச் சாவடிகளில், வருகிற 30ஆம் தேதி முதல் சுங்க வசூல் நிறுத்தப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத்திட்டம் என்ற புதிய திட்டத்தின் கீழ், 2200 கி.மீ மாநில நெடுஞ்சாலைகள், அடுத்த 10 ஆண்டுகளில் 4 வழித்தட சாலைகளாகவும், அகலப்படுத்தப்படும் என்றார்.

திருச்சி மாநகரிலும், மதுரை மாநகரிலும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்பொருட்டு, உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

நபார்டு வங்கி உதவியுடன், 425 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 75 ஆற்றுப்பாலங்கள் கட்டப்படும் என்றும், 10 ஆயிரம் கிலோ மீட்டர் அளவுள்ள, ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள் தரம் உயர்த்தப்படும் என்றும், அமைச்சர் அறிவித்துள்ளார்.

மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்திற்காக, மதுரை சுற்றுச்சாலையில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு, வாகன சுரங்கப் பாதை அமைக்கப்படும் என்றார்.

சென்னைக்கு வெளியே சென்னசமுத்திரம், நெமிலி, வானகரம், சூரப்பட்டு, பரனூர் ஆகிய 5 இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்திக்க இருப்பதாகவும், அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

தமிழக அரசுக்கு ஆயிரத்து 600 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதால் சாலை பணிகளுக்கு பேக்கேஜிங் முறையில் டெண்டர் விடும் நடைமுறையை கைவிடுவதாக அமைச்சர் எவ வேலு அறிவித்துள்ளார்.

இதற்கிடையே, கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு பாறையையும், திருவள்ளுவர் சிலையையும் இணைக்கும் சுமார் 140 மீட்டர் நீளம் கொண்ட கடல்சார் நடைபாலம் 37 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளதாக, துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பள்ளிக்கூட வாசல்களில் கஞ்சா மிட்டாய்கள் விற்கப்படுகின்றன - செல்லூர் ராஜு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement