இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் போது மைதானத்திற்குள் நுழைந்த பார்வையாளர் தான் ஒரு கிரிக்கெட் வீரர் என மற்றவர்களை நம்பவைக்கும் வீடியோ அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.
3-வது நாள் ஆட்டத்தின் போது இந்திய அணியின் ஜெர்சியை அணிந்த நபர் மைதானத்திற்குள் புகுந்து மற்ற வீரர்களை போல் விளையாட தயாரானார். இதை கண்ட மைதான பாதுகாவலர்கள் நபரை வெளியேற்ற முயற்சித்த நிலையில் தான் ஒரு இந்திய வீரர் என பார்வையாளர் நம்பவைக்க முயற்சிக்கும் வீடியோ இணையதளத்தில் வெளியானது.
தற்போது அந்த வீடியோவை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.