ஆப்கானிஸ்தானில் பல நகரங்களைத் தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் காபூல் நகரைக் காப்பதற்காக எப் 16 வகைப் போர் விமானங்களை அமெரிக்க விமானப்படை களமிறக்கியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தாலிபானின் வலுக்கோட்டைகளைத் தாக்குவதற்கு பி 52 வகை குண்டுவீச்சு விமானங்களையும், துப்பாக்கிகளுடன் கூடிய ஏசி 10 வகை விமானங்களையும் அமெரிக்க விமானப்படை பயன்படுத்தி வருகிறது.
லஸ்கர் கா, செபெர்கான் ஆகிய நகரங்களின் மீதும் அமெரிக்க விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தின. தாலிபான்களின் முன்னேற்றத்தால் ஆகஸ்டு 19, 18, 19 ஆகிய நாட்களில் இஸ்லாமாபாத்தில் நடைபெற இருந்த அமைதிப் பேச்சு காலவரையின்றித் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு 31 அன்று ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப்படைகள் வெளியேற உள்ளன.