பஞ்சாப் மாநிலம் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த இருவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
பஞ்சாபின் டார்ன் டரன் மாவட்டத்தில் கால்ரா என்ற கிராமம் அமைந்துள்ளது.
இந்திய பாகிஸ்தான் எல்லையோர கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் இருவர் உள்ளே நுழைய முயன்றுள்ளனர். இதனைக் கண்ட இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் அவர்களை நிற்குமாறு கூறினாலும், அவர்கள் மீண்டும் பாகிஸ்தானுக்குள் தப்பிச் செல்ல முயன்றனர். இதையடுத்து சந்தேகமடைந்த பாதுகாப்புப் படையினர் அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் நிகழ்விடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். இவர்களைப் போல வேறு யாரும் நுழைந்துள்ளனரா என தொடர்ந்து தேடுதல் வேட்டை நடப்பதாக பிஎஸ்எஃப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.