இன்று காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் உரையாற்றி வருகிறார்.
இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி உரை இன்று காலை 11 மணிக்கு தொடங்க இருக்கிறது. இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்புகள் குறித்தும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்கள் குறித்தும் பிரதமர் மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.