அயர்லாந்தில் மழையில் நனைந்த படி சக்கர நாற்காலியில் செல்லும் உடல் ஊனமுற்றவரை பாதுகாக்க குடை பிடித்தபடி உடன் செல்லும் இளம் தொழிலாளிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
அந்த இளம் தொழிலாளி அயர்லாந்தில் உள்ள மதுபான கடையில் வேலை பார்த்து வருகிறார். பணியின் போது சக்கர நாற்காலியில் செல்லும் உடல் ஊனமுற்ற நபர் ஒருவர் மழையில் நனைவதை கண்ட அந்த நபர் உடனடியாக தன் கடையின் முன்பு இருந்த பெரிய குடையை எடுத்து விரித்த படி உடன் சென்றார்.
இளைஞனின் இந்த மனிதாபிமான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.