பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் விடிய விடிய தாக்குதல் நடத்தியது.
அல் அக்ஸா மசூதி பிரச்னை தொடர்பாக எழுந்த பிரச்னையைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவத்திற்கும், பாலஸ்தீன ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது.
இரு வாரங்களாக நடந்து வரும் தாக்குதலில் பாலஸ்தீனத்தில் 63 குழந்தைகள் உள்பட 217 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரத்து 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஐநா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் போரை நிறுத்துமாறு கூறியும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று இரவு முழுவதும் விடிய விடிய இஸ்ரேலிய விமானங்களும், தரைப்படையினரும் தாக்குதல் நடத்தினர்.
தொடரும் தாக்குதல்களைக் கண்டித்து ரமல்லா, ஹெப்ரான் உள்ளிட்ட நகரங்களில் பாலஸ்தீன மக்கள் போராட்டம் நடத்தினர்.