செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

முதல்கட்ட சோதனையை முடித்தது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி..!

Mar 08, 2021 04:17:14 PM

செவ்வாய் கிரகத்தில் ஆய்வுப் பணிகளுக்கு அனுப்பப்பட்ட பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி தனது பயணத்தின் முதல்கட்ட சோதனை ஓட்டத்தை நிறைவு செய்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான அல்லது வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமெரிக்க விண்வெளி மையமான நாசா ஆய்வு நடத்தி வருகிறது. இதற்காக கடந்த ஆண்டு அனுப்பப்பட்ட ஆய்வூர்தியான பெர்சிவரன்ஸ் கடந்த மாதம் செவ்வாயில் தரையிறங்கியது.

இதனையடுத்து செவ்வாயின் தரைப்பகுதியில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வரும் அந்த ஆய்வூர்தி தனது சக்கரங்களின் தடத்தை படமாக எடுத்து அனுப்பியது. மேலும் அங்கு காணப்படும் மலைகள், குன்றுகள் மற்றும் பாறைகளையும் தெள்ளத் தெளிவாக படம்பிடித்துக் காட்டியது.

இந்நிலையில் பெர்சிவரன்சை அதிகமாக இயக்க கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் முயற்சி மேற்கொண்டதாகவும், இதன் விளைவாக ஆய்வூர்தி 33 நிமிடங்கள் முன்னும் பின்னுமாக இயக்கப்பட்டதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் மேலும் ஆய்வு செய்வதற்கான, சாத்தியமான பாதைகள் குறித்து பரிசீலித்து வருவதாகவும், ஏற்கனவே அனுப்பப்பட்ட கியூரியாசிட்டி ஆய்வூர்தியை விட 5 மடங்கு வேகத்தில் பெர்சிவரன்ஸ் இயங்குவதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பெர்சிவரன்சுடன் அனுப்பி வைக்கப்பட்ட சிறிய ஹெலிகாப்டரை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், 30 இடங்களில் பாறைகள் மற்றும் மண் மாதிரிகளை சேகரிக்க முயற்சி செய்து வருவதாகவும் நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

 


Advertisement
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
பாடகர் மனோவின் மகன்களை தாக்கியதாக 8 பேர் மீது வழக்குப்பதிவு
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement