செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

டெல்லியில் விவசாயிகள் போராட்டம்..! விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தைக்கு அழைப்பு...

Dec 01, 2020 06:54:24 PM

வேளாண் சட்டங்களை நீக்க வலியுறுத்தி, டெல்லி அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.

பஞ்சாப் , ஹரியானா ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்து டெல்லியை நோக்கி அணி வகுத்துள்ள பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் 6வது நாளாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வீதிகளில் உறங்கி மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஹரியானா எல்லையில் போலீசார் அவர்களைத் தடியடி நடத்தியும் தண்ணீர்ப் பீய்ச்சியும் விரட்டியதைத் தாண்டி விவசாயிகளின் பேரணி டெல்லியின் சிங்கு எல்லையை அடைந்துள்ளது.

சாலையோரம் தங்கிய விவசாயிகள் நேற்று குருநானக் ஜெயந்தியையும் கார்த்திகை தீபத் திருவிழாவையும் விளக்குகளை ஏற்றி வைத்துக் கொண்டாடினார்கள்.

டெல்லிக்கு வரும் 5 பாதைகளையும் மூடப்போவதாக எச்சரித்த விவசாயிகள் சாலைகளில் டிராக்டர்கள், வேன்கள், பேருந்துகளை நிறுத்தி வைத்துள்ளதால் டெல்லி மற்றும் அதன் வெளிப்புற சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

விவசாயிகள் போராட்டத்தை முடிவுக் கொண்டு வர மத்திய அமைச்சர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அமித்ஷா, ராஜ்நாத்சிங், தோமர் உள்ளிட்ட அமைச்சர்கள் பாஜக தலைவர் ஜேபி.நட்டாவுடன் நேற்று முன்தினம் பேச்சு நடத்தினர். நேற்று இரண்டாவது நாளாக இதுபற்றி விவாதித்த நிலையில், விவசாயிகள் பிரச்சினைகள் குறித்த பேச்சுவார்த்தைக்கு குழு ஒன்றை நியமித்துள்ளனர்.

இதனிடையே விவசாயிகள் கொரோனா மற்றும் குளிரில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ள மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், டெல்லி விக்யான் பவனில் இன்று பிற்பகல் 3 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவித்துள்ளார்.

32 விவசாய சங்கங்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், மத்திய அமைச்சரின் அழைப்பை ஏற்பது குறித்து இன்று தங்களுக்குள் பேசி முடிவெடுக்க இருப்பதாக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மத்திய அமைச்சர்கள் நரேந்திரசிங் தோமர், பியூஷ் கோயல் ஆகியோர் விவசாய சங்கங்களின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதில் வேளாண் மசோதாக்கள் குறித்து விவாதிக்க தனி குழு அமைக்கலாம் என்று அரசு தரப்பில் முன்மொழியப்பட்டது. அந்த குழுவில் விவசாய சங்க பிரதிநிதிகள் 4 அல்லது 5 பேர், வேளாண் துறை நிபுணர்கள், மத்திய அரசின் பிரதிநிதிகளை இடம்பெற செய்யலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்ட வருகிறது. 


Advertisement
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பள்ளிக்கூட வாசல்களில் கஞ்சா மிட்டாய்கள் விற்கப்படுகின்றன - செல்லூர் ராஜு
நெய்வேலியில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 20% போனஸ் கேட்டு தர்ணா

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement