செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

மோசடியில் இருந்து தப்பிக்க கொலை... வழக்கறிஞர் தம்பதிக்கு இரட்டை ஆயுள்

Nov 30, 2020 07:25:04 PM

கோவையில்  மோசடி வழக்கில் இருந்து மனைவியை விடுவிக்க, பெண்ணை கொன்று, ஆள் மாறாட்டம் செய்து இறப்புச் சான்றிதழ் பெற்ற வழக்கில், வழக்கறிஞர் தம்பதிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  

கோவை சிவானந்தா காலனியை சேர்ந்த அமாசை என்ற பெண் கடந்த 2011- ஆம் ஆண்டு, கணவரின் சம்மதம் இன்றி தன் பெயரிலுள்ள சொத்தை தம்பி பெயருக்கு மாற்றி எழுதுவதற்காக சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ராஜவேல் என்பவனை அணுகியுள்ளார். அந்த வழக்கறிஞர் ராஜவேலின் மனைவி மோகனா மீது ஏற்கனவே நிதி நிறுவனம் மூலம் 12 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஒடிசாவில் வழக்கு பதிவாகியிருந்தது. இந்த வழக்கில் இருந்து வழக்கறிஞரான தனது மனைவியை விடுவிக்க சதி திட்டம் தீட்டிக்கொண்டிருந்த ராஜவேல், தன்னிடம் கிளைண்டாக வந்த அமாசை என்ற பெண்ணை பயன்படுத்திக்கொள்ள எண்ணினான்.

தனது கார் ஓட்டுநர் பழனிசாமி உதவியுடன் அமாசையை மின்சார ஒயரால் கழுத்தை நெறித்து ராஜவேல் கொலை செய்துள்ளான். பின்னர் சடலத்தை மாநகராட்சி மின் மயானத்தில் எரித்து, தனது மனைவி இறந்துவிட்டதாக கூறி ஆள் மாறாட்டம் செய்து இறப்புச் சான்றிதழ் வாங்கி ஒடிசாவில் மோகனா மீது நிலுவையில் இருந்த மோசடி வழக்கை முடித்துள்ளான்.

பின்னர் சில காலம் கழித்து 2013-ல் மனைவி பெயரில் நிலம் பத்திர பதிவு செய்யும் போது, சிக்கிக் கொண்ட ராஜவேல், மனைவி இறந்துவிட்டதாக யாரோ தவறாக இறப்புச் சான்றிதழ் பெற்றுவிட்டதாக மழுப்பியுள்ளான். இது குறித்து மாநகராட்சி தரப்பில் இருந்து போத்தனூர் போலீசில் புகார் அளிக்கவே, மனைவி உயிரோடு இருக்கும் போது அவரது பெயரில் இறப்புச்சான்றிதழ் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மனைவியை விடுவிக்க ராஜவேல் ஆள் மாறாட்ட கொலையை அரங்கேற்றியதும் அம்பலமானது. இதனையடுத்து, 2014-ல் வழக்கறிஞர் தம்பதியான ராஜவேல் - மோகனா, கொலைக்கு உடந்தையாக இருந்த பொன்ராஜ், பழனிசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கின் விசாரணை கோவை 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால் வழக்கறிஞர் தம்பதி குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி, மொத்தமாக ஒரு லட்சத்து 20ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.

இந்த அபராத தொகையை பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்துக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கொலைக்கு உடந்தையாக செயல்பட்ட கார் ஓட்டுநர் பழனிசாமிக்கு ஒரு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றொரு நபரான பொன்ராஜ் அரசு தரப்பு சாட்சியாக மாறியதால், அவர் குற்றவாளி பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, தனி வழக்காக விசாரணை நடைபெற்று வருகிறது


Advertisement
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
உக்ரைன் போரை நிறுத்த அந்நாட்டுக்கான ஆயுத உதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் - ரஷ்யா
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
பாடகர் மனோவின் மகன்களை தாக்கியதாக 8 பேர் மீது வழக்குப்பதிவு
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement