செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

பீகார் தேர்தல் - பாஜக கூட்டணி முன்னிலை..!

Nov 10, 2020 04:29:31 PM

பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. ஆர்.ஜே.டி-காங்கிரஸ் கூட்டணி, 100க்கும் மேற்பட்ட இடங்களைப் பெற்றாலும், பின்னடைவையே எதிர்கொண்டுள்ளது.

243 இடங்களை கொண்ட, பீகார் சட்டப்பேரவைக்கு, அக்டோபர் 28ஆம் தேதி, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில், 3 கட்டங்களாக, சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 4 கோடியே 10 லட்சம் வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குகள் பலத்த பாதுகாப்புடன், 55 மையங்களில், காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவும் செய்யப்படுகிறது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்றது.

இதனைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. அதில், ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணியும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணியும், மாறி, மாறி முன்னிலை பெற்றன. ஆனால், காலை 10 மணி வாக்கில், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், - பாஜக கூட்டணி, பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை காட்டிலும் கூடுதல் இடங்களில் முன்னிலைப் பெற்றது.

இதனால், ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி பின்னடைவை எதிர்கொண்டது. நண்பகல் 12 மணி வாக்கில், ஆர்.ஜே.டி - காங்கிரஸ் கூட்டணி, ஓரிரு இடங்களை கூடுதலாப் பெற்றாலும், அதனால் எந்த பயனும் கிட்டவில்லை.

நண்பகல் 1 மணியளவில், வேட்பாளர்கள் முன்னிலை பெறுவதில், வாக்குகள் வித்தியாசம், சுமார் 80 தொகுதிகளில் ஆயிரத்திற்கும் கீழாகச் சென்றது. இதனால், வாக்கு எண்ணிக்கையில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த, மிக கவனமுடன், பொறுமையாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.

வழக்கமாக 26 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும் நிலையில், இம்முறை, 35 சுற்றுகளாக, வாக்குகள் எண்ணப்படுவதால், தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவர, இரவு வரை காத்திருக்க வேண்டி வரலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பீகார் தேர்தலில், எந்த கட்சி தனிப்பெரும் கட்சி என்பதில், பாஜகவுக்கும், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்திற்கும் இடையே, பகற்பொழுதில் கடும் போட்டி நிலவியது. ஆனால், மாலை 4 மணியளவில், பாஜக 75 இடங்களில் முன்னிலை பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. 63 இடங்களுடன், ராஷ்ட்ரிய ஜனதா தளம், இரண்டாவது தனிப்பெருங் கட்சியாக மாறியிருக்கிறது.

ஐக்கிய ஜனதா தளம், 47 தொகுதிகளிலும், காங்கிரஸ் வெறும் 19 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

ஆர்.ஜே.டி - காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் சுதந்திர லெனினிஸ்ட் ஆகிய இடதுசாரி கட்சிகள், 19 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.


Advertisement
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
உக்ரைன் போரை நிறுத்த அந்நாட்டுக்கான ஆயுத உதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் - ரஷ்யா
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
பாடகர் மனோவின் மகன்களை தாக்கியதாக 8 பேர் மீது வழக்குப்பதிவு
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement