செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி..? மாணவர்கள் குற்றச்சாட்டு..!

Oct 17, 2020 12:12:38 PM

நாடு முழுவதும் நேற்று வெளியிடப்பட்ட நீட் தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதால் மாணவர்களும், பெற்றோர்களும் குழப்பமடைந்துள்ளனர்.  

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டது. அதில் பல்வேறு மாநிலங்களில் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கையையும் தேர்வு முடிவில் இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கையையும் ஒப்பிடும்போது குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திரிபுராவில் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 3536 என குறிப்பிடப்பட்டு இருக்கும் நிலையில், தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 889 ஆக குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தரகாண்டில் 12,047 பேர் தேர்வு எழுதிய நிலையில், 37,301பேர் தேர்ச்சி பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் தெலுங்கானாவில் 50,392 பேர் தேர்வு எழுதிய நிலையில், ஆயிரத்து 738 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், ஆனால் தேர்ச்சி விகிதம் 49 புள்ளி15 சதவீதம் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல உத்தரப் பிரதேசத்தில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 992 பேர் தேர்வு எழுதிய நிலையில், 7 ஆயிரத்து 323 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், ஆனால் தேர்ச்சி விகிதம் 60 புள்ளி 79 சதவீதம் எனவும் புள்ளி விபரங்கள் வெளியிடப் பட்டுள்ளது.

நீட் தேர்வு முடிந்தவுடன், 14 லட்சத்து 3 7 ஆயிரம் பேர் தேர்வு எழுதியதாக மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் நேற்றைய தினம் 13 லட்சத்து 66 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வு எழுதியதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் மதிப்பெண்களிலும் குளறுபடிகள் ஏற்பட்டு இருக்குமோ என மாணவர்களும், பெற்றோர்களும் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடிகளில் இருந்ததன் எதிரொலியாக nta.ac.in இணையதளத்தில் இருந்து தேர்வு முடிவு விவரங்களை தேசிய தேர்வு முகமை இன்று நீக்கிவிட்டது. விரைவில் சரியான தேர்வு முடிவு விவரங்கள் வெளியிடப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.


Advertisement
மழை வெள்ள பாதிப்பிற்கு தி.மு.க., அ.தி.மு.க ஆட்சிகளே காரணம் - சீமான்
மழை நிவாரணம் வழங்கிய அமைச்சர் தா.மோ.அன்பரசன்
புளியந்தோப்பில் முதலமைச்சர் ஆய்வு
கஞ்சா, போதை மாத்திரைகளை விற்றதாக சினிமா உதவி இயக்குநர் கைது
திண்டுக்கல் அருகே தனியார் ஆம்னிப் பேருந்து மீது லாரி மோதியதில் ஒருவர் பலி
பொள்ளாச்சி அருகே சமுதாய நல்லிணக்கத்தை வலியுறுத்தி வள்ளி கும்மியாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி
புதுக்கோட்டையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர் ரகுபதி ஆய்வு
சாலையில் தேங்கிய மழைநீரில் அறுந்து விழுந்த மின்கம்பியால் 3 நாய்கள் பலி
கனமழையால் அறுந்து விழுந்த உயர் அழுத்த மின் கம்பியை கைகளால் அகற்ற முயன்ற முதியவருக்கு நேர்ந்த சோகம்
லெபனான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்.. அவசர அவசரமாக சொகுசு படகுகள் மூலம் நாட்டை விட்டு வெளியேறும் மக்கள்

Advertisement
Posted Oct 18, 2024 in தமிழ்நாடு,Big Stories,

நீட் தேர்வில் ஜெயிக்கனுமில்ல.. மாணவர்களை அடித்த பயிற்சியாளர்..! மாணவி மீது செருப்பு வீச்சு கொடுமை

Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை வீதியில் தூவிய விசித்திர.. விஞ்ஞான.. மாநகராட்சி..! கேள்விப்பட்ட அமைச்சர் சொன்னது என்ன ?

Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

அந்த மனசு தான் சார் “கடவுள்” உயிரை பணயம் வைத்து பத்திரமாய் மீட்ட வல்லவர்கள்..! மின்சாரம் தாக்கி குருக்கள் தப்பியது எப்படி ?

Posted Oct 17, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

மாமூல் ரவுடிகள் அட்டூழியம் கடைக்காரர் மண்டை உடைப்பு ஓசி சிகரெட் கேட்டு தாக்குதல்..! நீதி கேட்டு ஆளுநர் மாளிகை முற்றுகை

Posted Oct 14, 2024 in தமிழ்நாடு,Big Stories,

தமிழகத்தை உலுக்கிய 13 ஏகாதசி கொலைகள்..! வேட்டையனாய் துப்பறிந்த டி.எஸ்பி..! ஒரு நிஜ கிரைம் திரில்லர்


Advertisement