பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை பிரதமர் மகிந்த ராஜாபக்சேவும் பங்கேற்கும் உச்சிமாநாடு வருகிற 26-ம் தேதி நடைபெறுகிறது.
காணொலி மூலம் நடைபெறும் இந்த மாநாட்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்தும் விதமாக பேச்சுவார்த்தை நடத்தப்படுமென இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இரு தரப்பு ஒத்துழைப்பை அனைத்து தளங்களிலும் விரைவு படுத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் விவாதிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படுமென இலங்கை அரசு தெரிவித்துள்ளது.