செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இடைக்கால ஜாமீனில் விடுவிப்பு

May 23, 2020 04:11:48 PM

எஸ்.சி, எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  

சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில், பிப்ரவரி 14 ஆம் தேதி நடைபெற்ற உள்ளரங்க கூட்டத்தில், திமுக அமைப்புச் செயலாளரும் எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு சர்ச்சைக்குள்ளானது.

நீதித்துறையில் தாழ்த்தப்பட்டோருக்கு திமுக பிரநிதிநிதித்துவம் பெற்றுத் தந்தது என்றும், இதுதொடர்பான ஒரு உதாரணத்தை சுட்டிக்காட்டி அது திமுக போட்ட பிச்சை என்றும் ஆர்.எஸ்.பாரதி பேசியதாக விமர்சனங்கள் எழுந்தன. இதுதொடர்பாக ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் என்பவர் அளித்த புகாரின் பேரில், வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு பின்னர் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் இன்று அதிகாலை நங்கநல்லூரில் உள்ள ஆர்.எஸ்.பாரதி வீட்டில் வைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

பின்னர் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து எழும்பூரில் நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள, குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி செல்வக்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அங்கு திமுக முக்கிய பிரமுகர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் குழுமினர். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கினார். 

இதனிடையே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா கால ஊழலையும், நிர்வாகத் தோல்வியையும் திசை திருப்பவே, ஆர்.எஸ்.பாரதி அதிகாலையில் கைது செய்யப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மூன்று மாதங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட ஒரு புகாரை அதிகாலையில் தூசு தட்டி எடுத்து ஆர்.எஸ். பாரதியை வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பதற்கு, தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.


Advertisement
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பள்ளிக்கூட வாசல்களில் கஞ்சா மிட்டாய்கள் விற்கப்படுகின்றன - செல்லூர் ராஜு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement