செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

கொரானா பரவல்: பேரிடராக அறிவிப்பு..!

Mar 14, 2020 07:11:42 PM

கொரானா வைரஸ் பரவுவதை பேரிடராக (notified disaster) அறிவித்துள்ள மத்திய அரசு, கொரானாவால் உயிரிழப்போருக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் இருந்து திரும்பிய கர்நாடக மாநிலம் கலபுர்கியை சேர்ந்த 76 வயது முதியவர் ஒருவர், ஹைதராபாத்தில் கடந்த 10ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து டெல்லியின் மேற்கு பகுதியில் நேற்று 68 வயதான மூதாட்டி ஒருவர் கொரானாவுக்கு பலியாகியுள்ளார்.

சுவிட்சர்லாந்து, இத்தாலி நாடுகளுக்கு சென்றுவிட்டு கடந்த மாதம் 23ம் தேதி திரும்பிய அவருடைய மகனுக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரது தாயாரான 68 வயது மூதாட்டிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவருக்கும் கொரானா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மூதாட்டி இறந்தார். மூதாட்டியின் உயிரிழப்பை அடுத்து, இந்தியாவில் கொரானாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.

இதுதவிர்த்து நாடு முழுவதும் இதுவரை 83 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தனது இணையதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. அதில் இந்தியர்கள் 66 பேர் என்றும், வெளிநாட்டினர் 17 பேர் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. 

அதேநேரத்தில் கொரானா வைரசை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த தீவிர நடவடிக்கையால் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 5 பேரும், ராஜஸ்தான் மற்றும் டெல்லியை சேர்ந்த தலா ஒருவரும் குணமடைந்துள்ளனர். கேரள மாநிலத்தில் கடந்த மாதம் 3 பேர் குணமடைந்த நிலையில், அவர்களுடன் சேர்த்து நாடு முழுவதும் கொரானாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில் கொரானா பரவுவதை பேரிடராக (notified disaster) கருதி செயல்பட முடிவு செய்திருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநில பேரிடர் மீட்பு நிதியிலிருந்து (state disaster response fund) உதவித் தொகை அளிக்கும் வகையில், கொரானா நிலவரத்தை பேரிடராக (notified disaster) கருதி செயல்பட அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கொரானா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் அறிவிப்பில் மத்திய உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

ராஜஸ்தானில் கொரானா வைரஸ் நிலவரத்தை கருத்தில் கொண்டு, பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகளை இம்மாதம் 30ம் தேதி வரை மூடுவதற்கு அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்த மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், உயரதிகாரிகளுடன்  நடத்திய ஆலோசனைக்கு பிறகு வெளியிடப்பட்ட அறிவிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில்  மருத்துவ மற்றும் செவிலியர் கல்லூரிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது எனவும் ராஜஸ்தான் அரசு குறிப்பிட்டுள்ளது.  அதிக அளவு கூட்டமில்லாமல் எளிமையாக திருமண நிகழ்ச்சிகளை நடத்தும்படியும் ராஜஸ்தான் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக ஒருவாரக் காலத்துக்கு அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என மும்பை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மும்பை உயர்நீதிமன்றப் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மும்பை உயர்நீதிமன்றம், நாக்பூர், அவுரங்காபாத், கோவா ஆகிய இடங்களில் உள்ள அமர்வுகள் மார்ச் 16ஆம்தேதி முதல் ஒருவாரக் காலத்துக்கு அவசர வழக்குகளை மட்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் எனக் குறிப்பிட்டுள்ளது.  


Advertisement
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
உக்ரைன் போரை நிறுத்த அந்நாட்டுக்கான ஆயுத உதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் - ரஷ்யா
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
பாடகர் மனோவின் மகன்களை தாக்கியதாக 8 பேர் மீது வழக்குப்பதிவு
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி

Advertisement
Posted Sep 21, 2024 in சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி


Advertisement