செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சென்னை

5 பேர் உயிரிழப்பு உள்துறை செயலாளர் போட்ட அதிரடி உத்தரவு..! யாரெல்லாம் சிக்குவார்கள் ?

Oct 07, 2024 06:18:31 PM

சென்னையில் வான் சாகச நிகழ்ச்சியை காணும் ஆவலில் வந்து , கொளுத்தும் வெயிலில் கூட்ட நெரிசலில் மயங்கி விழுந்து பலியான 5 பேரின் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாயை நிவாரண உதவியாக முதல் அமைச்சர்அறிவித்துள்ள நிலையில் , உயிரிழப்புக்காண காரணம் குறித்து விரிவான விசாரணைக்கு உள்த்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்

விண்ணை பிளந்து விமானங்கள் செய்த சாகசத்தை காணும் ஆவலில் கடற்கரையில் திரண்ட லட்சக்காணக்கானோர் கொளுத்தும் வெயிலில் மணிக்கணக்கில் நின்று வான் சாகசத்தை ரசித்தாலும், குடிநீர் இன்றியும், முறையான போக்குவரத்து வசதி கிடைக்க பெறாமலும், கூட்ட நெரிசலிலும் கடும் அவதியடைந்தனர். 250 பேர் வரை மயக்கம் அடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கார்த்திகேயன், ஜான், உள்ளிட்ட 5 பேர் பரிதாபமாக பலியாகினர்

இந்த நிகழ்ச்சிக்காண முன்னேற்பாடுகள் குறித்து கடந்த வாரம் நடந்த அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் உள்துறை செயலாளர் தீரஜ்குமார் விரிவான அறிவுறுத்தல்களை வழங்கியதாக கூறப்படுகின்றது. மெரீனா கடற்கரை முழுவதும் 150 சிண்டெக்ஸ் டேங்குகளில் குடிதண்ணீர் வைத்திருக்க வேண்டிய பொறுப்பு பெருநகர சென்னை மாநகராட்சி உடையது என்று சுட்டிக்காட்டியுள்ளார். நிமிடத்துக்கு ஒரு பேருந்து இயக்குவது மாநகர போக்குவரத்து கழகம் செய்ய வேண்டியது என்றும் மயங்கி விழுந்தவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றி முதல் உதவி சிகிச்சை அளித்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியது சுகாதாரத்துறையின் பொறுப்பு என்றும் அறிவுறுத்தி உள்ளார். மக்களின் கூட்டம் குறையும் வரை கூடுதல் மின்சார ரெயில் இயக்க தென்னக ரெயில்வேயை கேட்டுக் கொண்டுள்ளார். இதில் எங்கே தவறு நடந்தது ? மக்கள் பாதிப்புக்கு என்னகாரணம் ?என்பதை கண்டறிந்து விரிவான அறிக்கை அளிக்கும்படி காவல்துறைக்கு உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்

இதற்கிடையே வான் சாகச நிகழ்ச்சிக்கு வந்து உயிரிழந்த 5 பேரின் குடும்பத்துக்கும் தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.


Advertisement
தேச பெருமையை பறைசாற்றும் நிகழ்ச்சியில் மக்களை துணை முதலமைச்சர் காக்காதது ஏன் : தமிழிசை கேள்வி
பன்றி வளர்ப்பு கொள்கைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி
சென்னை விமான சாகச நிகழ்ச்சிக்கு முறையான ஏற்பாடு இல்லை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு
வெயில் தாக்கம்தான் பாதிப்புகளுக்கு காரணம்.. கூட்ட நெரிசலால் மரணம் ஏற்படவில்லை - அமைச்சர் மா.சு
வான்சாகசம் காண வந்து குடிநீர் கிடைக்காமல் உயிரை விட்ட 5 பேர்..! யார் பொறுப்பு? மக்கள் ஆதங்கம்
சென்னையின் வான்பரப்பை அதிர விட்ட விமானப்படை... வீரர்களின் தீரத்தை எடுத்துரைத்த சாகசங்களின் தொகுப்பு..!
விமானப்படை சாகச நிகழ்ச்சியால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.. திடீரென தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்..
விமானப்படையின் 92ஆம் ஆண்டை முன்னிட்டு சென்னையில் வான் சாகச நிகழ்ச்சி
சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் இன்று இந்திய விமானப்படையின் விமான சாகச நிகழ்ச்சி
வள்ளலாரின் 201 வது பிறந்த நாள் விழாவில் திருஅருட்பா உரைநடை நூலை வெளியீட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி

Advertisement
Posted Oct 07, 2024 in செய்திகள்,சென்னை,Big Stories,

வான்சாகசம் காண வந்து குடிநீர் கிடைக்காமல் உயிரை விட்ட 5 பேர்..! யார் பொறுப்பு? மக்கள் ஆதங்கம்

Posted Oct 07, 2024 in செய்திகள்,சென்னை,Big Stories,

சென்னையின் வான்பரப்பை அதிர விட்ட விமானப்படை... வீரர்களின் தீரத்தை எடுத்துரைத்த சாகசங்களின் தொகுப்பு..!

Posted Oct 06, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஆசையாக அழைத்த மனைவி... கணவனுக்கு காத்திருந்த ஷாக் சடலத்துடன் ஆட்டோ சவாரி..! ராஜதந்திரங்கள் வீணானது எப்படி ?

Posted Oct 06, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வாழ்ந்தால் உன்னோடு மட்டுந்தான் வாழுவேன்.. காதலிக்காக உயிர் தியாகம்..! 2k கிட்ஸின் சீரியஸ் காதல் சோகம்

Posted Oct 04, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

ரெக்கி ஆபரேஷனில் சிக்கிய ஆம்ஸ்ட்ராங்.. 4 ரவுடிகளின் 6 மாத பிளான்.. 4,892 பக்க குற்றப்பத்திரிகை... யானை சாய்க்கப்பட்டதன் திகில் பின்னணி...


Advertisement