செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

நான் ஆம்பளடா.. அடாவடி ஆட்டோ ஓட்டுனரை பிடித்து அடக்கிய அந்த இரு பெண்கள் ..! போக்குவரத்து ஊழியர்களுக்கு அடி உதை

Sep 27, 2024 07:51:51 AM

சாலையை மறித்து ஆட்டோவை நிறுத்தியதை தட்டிக்கேட்ட அரசு போக்குவரத்து கழக ஊழியர்களை விரட்டி விரட்டி தாக்கிய ஆட்டோ ஓட்டுனரை , இரு பெண்கள் மடக்கிப்பிடித்து சமாதானப்படுத்திய சம்பவம் சென்னை புது வண்ணாரப்பேட்டையில் நிகழ்ந்துள்ளது.

சாலையில் நிறுத்தப்பட்ட ஆட்டோவை நகர்த்த சொன்னதால் அரசு போக்குவரத்து கழக ஊழியரை ஆட்டோ ஓட்டுனர் விரட்டி விரட்டி தாக்கிய காட்சிகள் தான் இவை..!

சென்னை புதுவண்ணாரப்பேட்டை மாநகரப் பேருந்து பணிமனையில் பணிபுரிந்து வரும் 5 போக்குவரத்து தொழிலாளர்கள், குரோம்பேட்டையில் இருந்து புதிய பேருந்துகளை தங்களது பணிமனைக்கு எடுத்து வந்துள்ளனர். வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே வந்த போது ஆட்டோ ஒன்று போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. இதனை நகர்த்தச்சொன்னதால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் ஆட்டோ ஓட்டுனர், போக்குவரத்து ஊழியரை தாக்கத் தொடங்கினார்

போக்குவரத்து காவலர் முன்னிலையில் விரட்டி விரட்டி முரட்டுத்தனமாக தாக்கினார்

இந்த சம்பவத்தை இரு சக்கர வாகனத்தில் வந்த பெண் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்ததால் அடிப்பதை நிறுத்தி தனது பக்க நியாயத்தை அவரிடம் தெரிவித்தார் ஆட்டோ ஓட்டுனர்.

அதற்குள்ளாக மேலும் சிலர், அவரை சுற்றுப்போட தொடங்கியதால் மீண்டும் போக்குவரத்து ஊழியரை தாக்க தொடங்கிய அந்த ஆட்டோ ஓட்டுனர், தடுக்க வந்தவரை கீழே தள்ளி மிதித்தார்

இதனால் அவரை தடுக்க பயந்து அனைவரும் விலகி நின்ற நிலையில், வீடியோ எடுத்த பெண் அவரை மடக்கிப்பிடித்தார். உடன் மற்றொரு பெண்ணும் அவரை பிடித்து கன்னத்தில் அடித்து அடக்கினார். அந்த பெண், அவரது உறவினராக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

இரு பெண்களும் மடக்கிய நிலையில் பேருந்துக்குள் இருந்து தன்னுடைய அடாவடியை வீடியோ எடுப்பதை பார்த்ததும், ஆம்பளடா... என்று கூச்சலிட்டவாறே அங்கிருந்து சென்றார் அந்த ஆட்டோ ஓட்டுனர்

இந்த சம்பவம் தொடர்பாக புகார் ஏதும் கொடுக்கப்படாத நிலையில், தாக்குதல் காட்சிகள் வெளியானதால் விசாரணையை தொடங்கி உள்ள போலீசார் சம்பவத்தில் தொடர்புடைய ஆட்டோ ஓட்டுனரை தேடி வருகின்றனர்.


Advertisement
சென்னை உயர்நீதிமன்ற 34ஆவது தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு
மழை நீர் மேலே.. தார்ச்சாலை என்ன ஒரு புத்திசாலி தனம்.. உத்தரவுக்கு கீழ்படிகிறார்களாம்..! தரமற்ற சாலைப் பணிக்கு மக்கள் எதிர்ப்பு
ஆஸ்திரேலியாவுக்கு கடத்தவிருந்த 112 கிலோ சூடோ எபிட்ரின் பறிமுதல்
சென்னை அருகே பித்தளை சிலைகளை ஐம்பொன் சிலை எனக் கூறி விற்க முயன்ற ரவுடி உள்பட 3 பேர் கைது
செந்தில்பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆவதற்கு எந்தத் தடையும் இல்லை: ஆர்.எஸ். பாரதி
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன்
குடல் மருத்துவ கருத்தரங்கில் பார் டான்சரின் நடனம் திறமை காட்டிய மருத்துவர்கள்
சாலை தரமாக இருந்தால் என்னை தூக்கிலிடுங்கள் திமுக கவுன்சிலர் ஆவேசம்..! வேலையை விட்டே செல்கிறேன் - அதிகாரி
சென்னையில் சார்பதிவாளர்கள் குறித்து அவதூறு கருத்துகள் பதிவிட்ட யூடியூபர் மீது குண்டர் சட்டத்தில் கைது
தேசிய விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் மீது மனைவி நகை மோசடி புகார்

Advertisement
Posted Sep 27, 2024 in சென்னை,Big Stories,

மழை நீர் மேலே.. தார்ச்சாலை என்ன ஒரு புத்திசாலி தனம்.. உத்தரவுக்கு கீழ்படிகிறார்களாம்..! தரமற்ற சாலைப் பணிக்கு மக்கள் எதிர்ப்பு

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மசாஜ் சென்டரில் ரெய்டு... சிலாப்பில் பதுங்கிய பெண்கள் ஒரு பெண் மட்டும் குதித்தது ஏன்..?...ரெய்டு காட்சிகளை வெளியிட்ட போலீஸ்

Posted Sep 26, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

குடல் மருத்துவ கருத்தரங்கில் பார் டான்சரின் நடனம் திறமை காட்டிய மருத்துவர்கள்

Posted Sep 26, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

சாலை தரமாக இருந்தால் என்னை தூக்கிலிடுங்கள் திமுக கவுன்சிலர் ஆவேசம்..! வேலையை விட்டே செல்கிறேன் - அதிகாரி

Posted Sep 26, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

உதட்டில் லிப்ஸ்டிக் பூசியது தப்பா ? குமுறும் முதல் பெண் டபேதார்..!


Advertisement