செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Sep 20, 2024 07:49:10 AM

சென்னை கொடுங்கையூரில் உள்ள எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணி கடையில் சாப்பிட்ட 22 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி உறவினர்கள் கடையை முற்றுகையிட்டதால் கடை இழுத்துப் பூட்டப்பட்டது. அதே போல சுகாதாரமில்லாமல் பிரியாணி சமைத்ததாக அப்பு பிரியாணி கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்


சென்னை கொடுங்கையூர் எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணி கடையில் சாப்பிட்ட தங்கள் மனைவி குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் தான் இவை..!

காவல்துறையினர் தங்களிடம் புகார் அளிக்க வருமாறு தெரிவித்த நிலையில் கடையை பூட்டவேண்டும் என்று உறவினர்கள் ஆவேசமாக கோரிக்கை வைத்தனர்

இதையடுத்து உணவு பொருள் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் வந்து விசாரித்த போது அந்த கடையில் எந்த உணவும் தயாரிக்கப்படுவதில்லை என்பதும் அலமாதியில் உள்ள பொது சமையல் கூடத்தில் வைத்து பிரியாணியை தயார் செய்து , ஒவ்வொரு கிளைக்கும் அனுப்பி வைத்து விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.

அந்த சமையல் கூடத்தை ஆய்வு செய்ய திருவள்ளூர் மாவட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்த சென்னை அதிகாரிகள், ஓட்டலை எப்படி பராமரிக்க வேண்டும் ? எதனை செய்யக்கூடாது என்று எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணி மேலாளர் அப்துல் சமதுவுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் ஒன்றையும் வழங்கினர்.

பாதிக்கப்பட்டவர்களால் அங்கு பிரச்சனை ஏதும் நிகழாத வண்ணம் தடுப்பதற்காக போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் இன்று கடை பூட்டப்பட்டது.

அதே போல இன்ஸ்டாகிராமில் பிரியாணி வீடியோ பதிவிட்டு பாப்புலரான அப்பு என்பவரின் பிரியாணி தயாரிக்கும் சமையல் கூடத்தில் ஆய்வு மேற்கொண்ட உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள், ஆய்வு மேற்கொண்டனர். சுகாதாரமில்லாமல் பிரியாணி தயாரிப்பது உறுதியானதால் கடையை இழுத்து பூட்ட போவதாக கூறினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பு சாலையில் பிரியாணி அண்டாக்களை வைத்து மறியல் செய்தார்

தான் ஏழை என்பதால் அதிகாரிகள் மிரட்டுவதாக இன்ஸ்டாகிராமில் லைவ் வீடியோ வெளியிட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார்

போலீஸ் எஸ்.ஐ முன்பு நெஞ்சில் அடித்து சாபமிட்ட அப்புவை போலீசார் எச்சரித்து சமாதானப்படுத்தினர். அப்புவின் ஆக்டிங் கைகொடுக்காத நிலையில், அந்த சமையல் கூடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்


Advertisement
ஒரே நாடு, ஒரே தேர்தலில் கள்ள ஓட்டு போடுவது, காசுக்கு பணம் கொடுப்பது குறையும்: பிரேமலதா
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை நங்கநல்லூரில் வெற்றி & வேலன் தியேட்டர்களுக்கு சீல்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு
திருவொற்றியூரில் டிமார்ட் வணிக வளாகப் பணிகளின் போது மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்த 6 பேர் கைது
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் 10 சதவீதம் மட்டுமே மற்றவர்கள் வெளியே உள்ளனர்: ஆனந்தன்
"தூக்கி விட நினைத்தேன்.. அனால் என் காலை வாரி விட்டார்கள்" - நடிகர் விமல்
தூக்கில் தொங்கிய நிலையில் எஸ்.எஸ்.ஐ சடலமாக மீட்பு.. கண்டித்த மனைவியால் விபரீதம்..?
ரவுடி காக்காதோப்பு பாலாஜி என்கவுண்டர் சம்பவம்.. போலீசார் கொடுத்த விளக்கம்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement