செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பஸ் கதவை மூடிக் கொண்டு நடு வழியில் ஓட்டுநர்கள் சண்டை பறந்து மிதித்த நடத்துநர்...!

Feb 05, 2024 08:02:02 PM

சென்னை கோயம்பேடு அருகே நடுவழியில் பேருந்தை நிறுத்தி இரண்டு அரசுப் பேருந்துகளின் ஓட்டுநர்களும், நடத்துநர்களும் மாறி மாறி தாக்கிக் கொள்ள பயணிகள் அவர்களை சமாதானம் செய்த நிகழ்வு நடந்தேறியது.

சென்னை கொரட்டூரிலிருந்து தாம்பரம் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த எல்70 என்ற மாநகர பேருந்து ஞாயிறு மாலையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தது.

அப்போது, பின்னால் வந்து நின்ற மற்றொரு அரசுப் பேருந்தின் ஓட்டுநர் வழிகேட்டு ஹாரன் அடித்துள்ளார்.

ஆனாலும் வழி கிடைக்காததால் பின்னால் வந்த பேருந்தின் நடத்துநர் பாலகுமார், எல்70 பேருந்தின் ஓட்டுநர் சிவானந்தத்திடம் வழிவிடுமாறு கூறியுள்ளார்.

எதுவாக இருந்தாலும் உள்ளே வந்து பேசும்படி சிவானந்தம் கூறவே, பாலகுமாரும், அவரது பேருந்தின் ஓட்டுநர் புண்ணியமூர்த்தியும் எல்70 பேருந்திற்குள் ஏறியவுடன் தானியங்கி கதவுகளை பூட்டி விட்டு சிவானந்தம் பேருந்தை இயக்கியதாக கூறப்படுகிறது.

நிறுத்தும் படி கூறியும் நிறுத்தாமல் சென்றதால் கியர் ராடை பிடித்து இழுத்து பேருந்து இயக்காதவாறு தடுத்தார் புண்ணியமூர்த்தி.

நடுவழியில் பேருந்து நின்றதும் இரண்டு ஓட்டுநர்களும் சட்டையை பிடித்துக் கொண்டு மாறி மாறி தாக்கிக் கொள்ள, எட்டி உதைத்து தாக்கினார் நடத்துநர் பாலகுமார்.

இந்த திடீர் சண்டையை பேருந்திலிருந்த ஒரு பயணியும், வெளியே இருந்த பொதுமக்களில் ஒருவரும் சமாதானம் செய்த பிறகு அங்கு போக்குவரத்து போலீஸார் இருதரப்பையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

சக ஓட்டுநர் மீதான தாக்குதலை தடுக்காமல் முழு சம்பவத்தையும் L70 பேருந்து நடத்துநர் ஈஸ்வரன் வீடியோவாக பதிவு செய்ததாக தெரிவித்தனர் போலீஸார்.


Advertisement
குறுஞ்செய்தியில் வரும் லிங்க்.. உஷார் ... வங்கிக் கணக்கில் இருந்து நூதன முறையில் பணம் திருட்டு
16 வயது சிறுமிக்கு 26 வயது இளைஞரை திருமணம் செய்து வைத்ததாக புகார்
பாடகர் மனோவின் மகன்களை தாக்கியதாக 8 பேர் மீது வழக்குப்பதிவு
வேட்டையன் படம் நன்றாக வந்துள்ளது... அரசியல் கேள்விகளை கேட்காதீர்கள்: நடிகர் ரஜினிகாந்த்
பெரியாருக்கும் தேசிய அரசியலுக்கும் சம்மந்தம் இல்லை: கரு.நாகராஜன்
சன்னிலியோனுடன் பேச இந்தி தெரியாததால் கவலையாக உள்ளது இயக்குநர் பேரரசு
ஒரே நாடு, ஒரே தேர்தலில் கள்ள ஓட்டு போடுவது, காசுக்கு பணம் கொடுப்பது குறையும்: பிரேமலதா
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement