செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சென்னை

கொட்டித்தீர்த்த கனமழை வீடு தேடி வந்த வெள்ளம் நீர்த்தேக்கமான சாலைகள்..! மழை நீரை வடியவைக்க தீவிரம்

Nov 30, 2023 05:26:16 PM

தொடர்மழை காரணமாக சென்னை மாம்பலம், கொளத்தூர், தியாகராய நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியது. இரவோடு இரவாக மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கொளத்தூர் பகுதியில் சில மணி நேரத்தில் இரவு 15 சென்டி மீட்டர் அளவுக்கு பெய்த மழையால் தேங்கிய மழைநீர் பெரும்பாலான இடங்களில் அகற்றப்பட்டது. அஞ்சுகம் நகர் பகுதி குடியிருப்புகளில் புகுந்த வெள்ளத்தை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றினர்.

அதிகாலை பெய்த மழையால், தியாகராயநகர், மேற்கு மாம்பலத்தின் பெரும்பாலான சாலைகளில் தேங்கிய நீர் அகற்றப்பட்ட நிலையில், லட்சுமி நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

மேற்கு மாம்பலம் பிருந்தாவன் தெருவில் , சாலையில் நடந்து சென்ற மூதாட்டி மழைநீரில் இடறி கீழே விழுந்தார்.

முத்துரங்கன் சாலையில் தேங்கிய மழை நீரில் இரு சக்காரவாகன ஓட்டிகள் இருவர் தடுமாறி விழுந்த நிலையில் அவர்களது செல்போன்கள் தண்ணீரீல் விழுந்து சேதம் அடைந்தது


சென்னை பட்டாளம் பகுதியில் உள்ள டேமொலஸ் தெருவிற்குள் மழை நீர் கால்வாயில் இருந்து வெளியேறிய வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.

சென்னையை அடுத்த பெருங்குடி திருவள்ளுவர் நகரில் குடியிருப்புகளுக்கு புகுந்த மழை நீரால் அப்பகுதிவாசிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

பெய்த கனமழையால், மாங்காடு ஓம்சக்தி நகர் மற்றும் முடிச்சூர் தெருக்களில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது.

மடிப்பாக்கத்தில் மூவரசம்பட்டு ஏரி நிரம்பி ஊருக்குள் நீர் புகுந்ததால் பிருந்தாவன் நகர் குடியிருப்புகளில் வெள்ள நீர் பாய்ந்தோடியது.

இதனால் அந்தப்பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 6,000 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் அடையாற்றில் நீரோட்டம் அதிகரித்துள்ளதால் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீர் வடியவில்லை என பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணிகளை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

சென்னை யானைக்கவுனி பகுதியில் அமைச்சர் சேகர்பாபுவும், மேயர் பிரியாவும் வெள்ளம் அகற்றும் பணிகளை ஆய்வு செய்தனர்.

அதேபோல், சென்னை சைதாபேட்டையின் சில தெருக்களில் தேங்கி நின்ற மழை வெள்ளத்தை அகற்றும் பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

 


Advertisement
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை நங்கநல்லூரில் வெற்றி & வேலன் தியேட்டர்களுக்கு சீல்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு
திருவொற்றியூரில் டிமார்ட் வணிக வளாகப் பணிகளின் போது மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்த 6 பேர் கைது
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் 10 சதவீதம் மட்டுமே மற்றவர்கள் வெளியே உள்ளனர்: ஆனந்தன்
"தூக்கி விட நினைத்தேன்.. அனால் என் காலை வாரி விட்டார்கள்" - நடிகர் விமல்
தூக்கில் தொங்கிய நிலையில் எஸ்.எஸ்.ஐ சடலமாக மீட்பு.. கண்டித்த மனைவியால் விபரீதம்..?
ரவுடி காக்காதோப்பு பாலாஜி என்கவுண்டர் சம்பவம்.. போலீசார் கொடுத்த விளக்கம்
"கட்டிடம் கட்ட வேண்டும் என்றால் கப்பம் கட்ட வேண்டும்" மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடிகளை கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement