செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

போதையில் இருந்தா... மூக்கில் பஞ்ச் விடுவீங்களா...? போலீசுடன் அடாவடி வம்பு

Jul 30, 2023 07:22:12 PM

நள்ளிரவில் மதுபோதையில் காரை ஓட்டி வந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீஸாரின் ரோந்து வாகனத்தின் மீது மோதிய இளைஞர், போலீஸார் தனது மூக்கை உடைத்து விட்டதாகக் கூறி ரகளையில் ஈடுபட்டார்.

சென்னை வள்ளுவர் கோட்டம் ஹைரோட்டில், தடுப்புகளை அமைத்து வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் காவல்துறையினர்.

நள்ளிரவு நேரத்தில் வேகமாக வந்த மாருதி சுசூகி காரை நிறுத்துவதற்கு சைகை செய்தனர் போலீஸார். ஆனால், அந்த கார் நிற்காததோடு, பேரிகார்டுகளின் மீது மோதி, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸின் ரோந்து வாகனத்தின் பின்பகுதியில் மோதியது.

உடனடியாக, காருக்குள் இருந்த இளைஞரை மீட்டதாகவும் அப்போது அவர் மூக்கிலிருந்து ரத்தம் வழிந்ததாகவும் தெரிவித்தனர் போலீஸார். மேலும், அவர் மதுபோதையில் இருந்தது தெரிய வந்ததால், ப்ரீத் அனலைசர் கருவியில் ஊதச் சொன்னார்கள் போலீஸார்.

முதலில் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சிய அந்த இளைஞரோ பிறகு தன்னை போலீஸார் தாக்கி விட்டதாக குற்றஞ்சாட்டினார். தான் மதுபோதையில் வந்தாலும் எப்படி எனது மூக்கில் பஞ்ச் பன்னலாம் என கேட்டு ரகளையை தொடங்கினார் அந்த இளைஞர்.

வேகமாக வந்து போலீஸின் ரோந்து வாகனத்தில் இடித்ததில் இரண்டு கார்களும் சேதமடைந்து விட்டதாகவும், கார் ஸ்டியரிங்கில் பட்டு மூக்கு உடைந்து ரத்தம் வந்ததாகவும் அந்த இளைஞரிடம் போலீஸார் விளக்கமளித்தனர்.

ஆனால், அதனை ஏற்க மறுத்த அந்த இளைஞரோ, டிடியில் இருந்தால் 10 ஆயிரம் ரூபாய் தானே ஃபைன் போடூவீர்கள், போட்டுக்கங்க ஆனா என் மூக்கை ஏன் உடைத்தீர்கள் என திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டே இருந்தார்.

ஒருவழியாக ப்ரீத் அனலைசர் கருவியில் அவரை ஊத வைத்ததில் அவர் மது போதையில் இருந்தது உறுதியானது.

இதனையடுத்து, ராயபேட்டையைச் சேர்ந்த ரியாஸ் அகமது என்ற அந்த இளைஞருக்கு போதையில் வாகனத்தை இயக்கியதற்காக 10 ஆயிரம் ரூபாயும், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காததற்கு 1,500 ரூபாயும் மற்றும் உரிய ஆவணங்களை காட்டாததற்கு 500 ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டதாக தெரிவித்தனர் போலீஸார்.

குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தியதாக ரியாஸ் அகமது மீது பாண்டிபஜார் போக்குவரத்து காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


Advertisement
சன்னிலியோனுடன் பேச இந்தி தெரியாததால் கவலையாக உள்ளது இயக்குநர் பேரரசு
ஒரே நாடு, ஒரே தேர்தலில் கள்ள ஓட்டு போடுவது, காசுக்கு பணம் கொடுப்பது குறையும்: பிரேமலதா
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை நங்கநல்லூரில் வெற்றி & வேலன் தியேட்டர்களுக்கு சீல்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு
திருவொற்றியூரில் டிமார்ட் வணிக வளாகப் பணிகளின் போது மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்த 6 பேர் கைது
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் 10 சதவீதம் மட்டுமே மற்றவர்கள் வெளியே உள்ளனர்: ஆனந்தன்
"தூக்கி விட நினைத்தேன்.. அனால் என் காலை வாரி விட்டார்கள்" - நடிகர் விமல்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement