செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சென்னை

சென்னையில் ரவுடியை ஓடஓட வெட்டி விட்டு தலைமறைவான 7 பேர் கொண்ட கும்பல் கைது!

Jul 14, 2023 04:10:53 PM

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் குடிபோதையில் இருந்த ரவுடியை ஒட ஒட விரட்டி வெட்டி விட்டு தப்பியோடிய சம்பவத்தில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுவண்ணாரப்பேட்டை நாகூரார் தோட்டத்தைச் சேர்ந்த தமிழரசன் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளில் 6 வழக்குகள் உள்ளன. கடந்த 8 தேதி அன்று மாலை தண்டையார்பேட்டையில் மது அருந்தி கொண்டு இருந்த அவரை இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வெட்டி விட்டு தப்பி சென்றனர்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மூன்று தனிப்படைகளை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அவர்களுக்கு தாக்குதல் நடத்தியவர்கள் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதன் பேரில் அங்கு போலீசார் சென்ற போது கிஷோர் குமார் என்பவர் கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக சுவர் ஏறி தப்பி செல்லும் முயன்றதாக தெரிகிறது. ஆனால் அவர் கீழே விழுந்ததில் இடது கை எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரையும், பூபாலன், மாவு கிஷோர் உள்ளிட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த ஆண்டு புதுவண்ணாரப்பேட்டை நாகூரார் தோட்டத்தைச் சேர்ந்த ரவுடி ஜீவன் குமார் என்பவன் மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டதாகவும், அந்த கொலைக்கு பழிவாங்குவதற்காகவே ஜீவன் குமாரின் அண்ணன் கிஷோர் குமார் தனது நண்பர்கள் மூலமாக தமிழரசனை கொலை செய்ய முயன்றதும் தெரியவந்ததாக போலீசார் கூறினர்.

 


Advertisement
வேட்டையன் படம் நன்றாக வந்துள்ளது... அரசியல் கேள்விகளை கேட்காதீர்கள்: நடிகர் ரஜினிகாந்த்
பெரியாருக்கும் தேசிய அரசியலுக்கும் சம்மந்தம் இல்லை: கரு.நாகராஜன்
சன்னிலியோனுடன் பேச இந்தி தெரியாததால் கவலையாக உள்ளது இயக்குநர் பேரரசு
ஒரே நாடு, ஒரே தேர்தலில் கள்ள ஓட்டு போடுவது, காசுக்கு பணம் கொடுப்பது குறையும்: பிரேமலதா
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை நங்கநல்லூரில் வெற்றி & வேலன் தியேட்டர்களுக்கு சீல்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு
திருவொற்றியூரில் டிமார்ட் வணிக வளாகப் பணிகளின் போது மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்த 6 பேர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement