செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வாழைப்பழத்திற்குள் மிளகு சைஸில் விதைகள்.. விசித்திரத்திற்கு காரணம் என்ன..? நம்ம சென்னையில் அதிசயம்

Jun 17, 2023 01:11:43 PM

சென்னை வளசரவாக்கத்தில் இரண்டரை ஆண்டுகள் கழித்து வாழைமரம் ஒன்று குலை தள்ளிய  நிலையில், அதன் வாழைப்பழங்களில் துவர்ப்புச் சுவையுடன் மிளகு அளவிலான ஏராளமான விதைகள் இருந்தது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாழைப்பழத்தில் இருந்த மிளகு அளவிலான விதைகளைக் கண்டு மிரண்டு போன சுப்பு என்கிற சுப்பிரமணி இவர் தான்..!

வளசரவாக்கம், சக்கரபாணி தெருவில் உள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வரும் சுப்பிரமணி என்பவர் இரு வாழைமரங்களை வளர்த்து வந்தார். 24 அடி உயரம் வளர்ந்தாலும், கடந்த இரண்டரை வருடங்களாக குலை தள்ளாமல் இருந்த அந்த வாழை மரங்களில் ஒன்றில் சில வாரங்களுக்கு முன்பு குலைதள்ளியது அண்மையில் அந்த மரத்தை வெட்டி அந்த வாழைக்குலையை கீழே இறக்கினார் சுப்பு , அந்த வாழைப்பழங்களில் தான் மிளகு அளவில் விதைகள் காணப்பட்டன.

அந்த வாழைப்பழங்களில் உள்ள விதைகள் துவர்ப்பாக இருந்ததால் அதனை முழுமையாக உண்ண முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அந்த பழங்களில் உள்ள விதையை எடுத்து காயப்போடும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

மிளகு போன்ற விதைகள் கொண்ட வாழைப்பழங்களுடன் வேளாண் ஆராய்ச்சி மைய அதிகாரிகளை சந்தித்த சுப்பு, வாழைப்பழம் இப்படி இருப்பதற்கு என்ன காரணம் என்று கேட்டுள்ளார். அதற்கு அதிகாரிகள் வாழைப்பழங்களை தாங்கள் ஆய்வு செய்து பதில் தருவதாக கூறி உள்ளனர். இதற்கிடையே வயதான வாழைமரங்கள் குலைதள்ளினால் அவற்றில் விதைகள் பெரிதாகத் தோன்றும் என்று சிலர் கூறி வருகின்றனர். இதற்கிடையே அவர் வெட்டிவிட்ட வாழைமரத்தின் அடியில் 20 கிளைக் கன்றுகள் புதிதாக முளைத்துள்ளன.

விதையில்லாப் பழங்களை தேடி உண்ணும் தலைமுறை வாழும் இந்த காலத்தில், பருத்த விதைகளுடன் விளைந்துள்ள வாழைப்பழம் அதிசயமே..!

 

 


Advertisement
பெரியாருக்கும் தேசிய அரசியலுக்கும் சம்மந்தம் இல்லை: கரு.நாகராஜன்
சன்னிலியோனுடன் பேச இந்தி தெரியாததால் கவலையாக உள்ளது இயக்குநர் பேரரசு
ஒரே நாடு, ஒரே தேர்தலில் கள்ள ஓட்டு போடுவது, காசுக்கு பணம் கொடுப்பது குறையும்: பிரேமலதா
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை நங்கநல்லூரில் வெற்றி & வேலன் தியேட்டர்களுக்கு சீல்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு
திருவொற்றியூரில் டிமார்ட் வணிக வளாகப் பணிகளின் போது மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்த 6 பேர் கைது
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் 10 சதவீதம் மட்டுமே மற்றவர்கள் வெளியே உள்ளனர்: ஆனந்தன்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement