செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சென்னை

மதுபான பார்ட்டிக்கு அனுமதிக்காததால் கல்லூரி மாணவன் ஆத்திரம் ; காரை எடுத்து வந்து இரும்பு கேட்டில் மோதியதால் பரபரப்பு

Apr 04, 2022 03:17:52 PM

சென்னையில் வயது குறைவாக இருந்ததால் மதுபான பார்ட்டிக்கு அனுமதிக்காத நட்சத்திர ஹோட்டல் ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்த கல்லூரி மாணவர், ஆத்திரத்தில் காரை வைத்து இரும்புக் கேட்டில் மோதி உடைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

முகப்பேரைச் சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவர் ஆகாஷ், கிண்டி கத்திப்பாரா அருகே நட்சத்திர ஹோட்டலுக்கு மதுபான பார்ட்டிக்கு சென்றிருக்கிறார். ஹோட்டலில் நடக்கும் மது விருந்துக்கு பெரும்பாலும் 21 வயதுக்கு மேற்பட்டவர்களே அனுமதிக்கப்படும் நிலையில், அவருக்கு வயது குறைவாக இருந்ததால் ஊழியர்கள் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, காரை எடுத்து வந்து பூட்டியிருந்த கேட் மீது வேண்டுமென்றே மோதினார். உடைத்த வேகத்தில் கேட்டின் ஒரு பகுதி காரின் சக்கரத்தில் சிக்கிக் கொண்டதால், கார் சாலையின் நடுவிலேயே நின்றுவிட்டது. பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார், காருக்குள் காயமடைந்திருந்த கல்லூரி மாணவரை மீட்டு சிகிச்சைக்கு அனுமதித்ததோடு, பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் காரை அப்புறப்படுத்தினர்.

இதனால், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாணவர் ஓட்டி வந்த காரில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டியிருந்ததால், அவரது குடும்பத்தினர் யாரும் காவல்துறையில் இருக்கிறார்களா என விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், ஏற்கனவே அந்த இளைஞர் மதுபோதையில் இருந்தது தெரியவந்திருக்கும் நிலையில், குடிபோதையில் வாகனத்தை இயக்கியது உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 


Advertisement
குறுஞ்செய்தியில் வரும் லிங்க்.. உஷார் ... வங்கிக் கணக்கில் இருந்து நூதன முறையில் பணம் திருட்டு
16 வயது சிறுமிக்கு 26 வயது இளைஞரை திருமணம் செய்து வைத்ததாக புகார்
பாடகர் மனோவின் மகன்களை தாக்கியதாக 8 பேர் மீது வழக்குப்பதிவு
வேட்டையன் படம் நன்றாக வந்துள்ளது... அரசியல் கேள்விகளை கேட்காதீர்கள்: நடிகர் ரஜினிகாந்த்
பெரியாருக்கும் தேசிய அரசியலுக்கும் சம்மந்தம் இல்லை: கரு.நாகராஜன்
சன்னிலியோனுடன் பேச இந்தி தெரியாததால் கவலையாக உள்ளது இயக்குநர் பேரரசு
ஒரே நாடு, ஒரே தேர்தலில் கள்ள ஓட்டு போடுவது, காசுக்கு பணம் கொடுப்பது குறையும்: பிரேமலதா
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement