ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு நாளை முதல் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.
புத்தாண்டை ஒட்டி கடற்கரைகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், தொற்று அதிகரிப்பதை கருத்தில் கொண்டு மறு உத்தரவு வரும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. நடைபயிற்சி செல்லும் பொதுமக்கள் மற்றும் பிரத்யேக பாதையில் மாற்றுத்திறனாளிகள் செல்ல மட்டும் மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.
மேலும், கடற்கரையின் அணுகு சாலையை மக்கள் பயன்படுத்துவதற்கும் தடை இல்லை என குறிப்பிட்ட மாநகராட்சி, கடற்கரையின் மணல் பரப்பில் செல்வதற்கு மட்டும் தடை விதிப்பதாக விளக்கமளித்துள்ளது.