சென்னையில் ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு சோதனையை மீண்டும் தொடங்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இதற்காக வார்டு வாரியாக சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், இளநிலை பொறியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் "மீண்டும் மஞ்சப்பை இயக்கம்" என்ற புதிய நடைமுறையை செயல்படுத்த தமிழக அரசு முனைப்பு காட்டி வருவதன் ஒரு பகுதியாக சென்னையில் வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகள் தோறும் சோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.