சென்னை பெசன்ட் நகரில், குப்பை தொட்டியில் வீசப்பட்ட மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள், மருத்துவ பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்டவை என ஆய்வில் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு ஒரே நபருடையது அல்ல என்றும், எலும்புகள் முழுவதும் வார்னிஷ் அடிக்கப்பட்டு குறியீடுகள் குறிக்கப்பட்டு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
எலும்புக்கூடுகளை குப்பைத் தொட்டி அருகே வீசியது யார் என்பது குறித்து சிசிடிவி காட்சி மூலம் விசாரித்து வருவதாகவும், எலும்புகள் டி.என்.ஏ ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.