செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சென்னை

பிரசாத் ஸ்டூடியோ நிபந்தனை… ஏற்றுக்கொண்டார் இளையராஜா

Dec 23, 2020 12:55:51 PM

பிரசாத் ஸ்டூடியோவில் உரிமை கோரவில்லை என்றும், இழப்பீடு கோரிய மனுவைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் உயர்நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா உறுதி மொழிப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் 1976ஆம் ஆண்டு முதல் இசைக்கோப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தார்.

அந்த இடத்தில் இருந்து இளையராஜாவைப் பிரசாத் ஸ்டூடியோ வெளியேற்றியது. இது தொடர்பான வழக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் ஸ்டூடியோவில் உள்ள தனது இசைக் கோப்புகள், இசைக் கருவிகள், விருதுகள் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்ள அனுமதிக்கவும், அறையில் தியானம் செய்ய அனுமதிக்கவும் கோரி உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, இளையராஜாவின் பிரதிநிதிகள் வந்து பொருட்களை எடுத்துச் செல்லலாம் எனப் பிரசாத் ஸ்டூடியோ சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அவ்வாறு அனுமதிக்கும்போது இழப்பீடு கோரிக்கையை வலியுறுத்த வேண்டாமென இளையராஜாவுக்கு நீதிபதி அறிவுறித்தி இருந்தார்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உரிமையியல் நீதிமன்றத்தில் 50 லட்ச ரூபாய் இழப்பீடு கோரித் தொடுத்த வழக்கு மற்றும் கிரிமினல் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும், ஸ்டூடியோ உள்ள நிலத்தை உரிமை கோரக் கூடாது என்கிற நிபந்தனைகளுடன் இளையராஜாவை அனுமதிப்பதாகப் பிரசாத் ஸ்டூடியோ சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இளையராஜா வந்து செல்லும் நாள் குறித்து இரு தரப்பு வழக்கறிஞர்கள் முடிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதாகக் கூறி இளையராஜா சார்பில் உயர்நீதிமன்றத்தில் மெமோ தாக்கல் செய்யப்பட்டது.


Advertisement
வேட்டையன் படம் நன்றாக வந்துள்ளது... அரசியல் கேள்விகளை கேட்காதீர்கள்: நடிகர் ரஜினிகாந்த்
பெரியாருக்கும் தேசிய அரசியலுக்கும் சம்மந்தம் இல்லை: கரு.நாகராஜன்
சன்னிலியோனுடன் பேச இந்தி தெரியாததால் கவலையாக உள்ளது இயக்குநர் பேரரசு
ஒரே நாடு, ஒரே தேர்தலில் கள்ள ஓட்டு போடுவது, காசுக்கு பணம் கொடுப்பது குறையும்: பிரேமலதா
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை நங்கநல்லூரில் வெற்றி & வேலன் தியேட்டர்களுக்கு சீல்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு
திருவொற்றியூரில் டிமார்ட் வணிக வளாகப் பணிகளின் போது மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்த 6 பேர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement