செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சென்னை

சிறுமிக்கு பாலியல் கொடுமை இளைஞனுக்கு வலைவீச்சு

Sep 18, 2020 10:54:32 AM

சென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய நபரை போலீசார் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை தீவுத் திடல் அருகே அன்னை சத்யா நகரைச் சேர்ந்த 11 வயது சிறுமி தாயுடன் வசித்து வருகிறார். மாநகராட்சிப் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் இந்த சிறுமி வியாழக்கிழமை காலை அப்பகுதியில் உள்ள சிறுவர்களோடு விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, அதே பகுதியை சேர்ந்த 28 வயதான மணிகண்டன் என்பவன், சிறுவர்- சிறுமிகளிடம் காசு கொடுத்து தின்பண்டம் வாங்க அனுப்பியுள்ளான்.

பின்னர், 11 வயது சிறுமியை அங்கிருந்த குடிசை வீட்டிற்கு அழைத்துச் சென்று, மிரட்டிப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

சிறுமியின் உடலில் ரத்தப் போக்கு அதிகமாக இருந்ததால், பெற்றோர் அவரை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சையளித்து வருகின்றனர்.

இதனிடையே, சிறுமியுடன் விளையாடிய சிறுவர்-சிறுமியர் சம்பவ இடத்தில் மணிகண்டன் இருந்ததைத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சிறுமியின் தாயார் கொடுத்த புகாரில் முத்தியால்பேட்டை அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலையைச் சேர்ந்த மணிகண்டன், சத்யா நகரில் தங்கி கூலி வேலை செய்து வருகிறான். கர்ப்பமாக உள்ள மனைவியை மாமியார் வீட்டிற்கு அனுப்பிவிட்டு, கஞ்சா போதையில் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது.

போலீசார் தேடுவதை அறிந்து அவன் சொந்த ஊருக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதால் தனிப்படை போலீசார் திருவண்ணாமலைக்கு விரைந்துள்ளனர்.


Advertisement
ஒரே நாடு, ஒரே தேர்தலில் கள்ள ஓட்டு போடுவது, காசுக்கு பணம் கொடுப்பது குறையும்: பிரேமலதா
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை நங்கநல்லூரில் வெற்றி & வேலன் தியேட்டர்களுக்கு சீல்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு
திருவொற்றியூரில் டிமார்ட் வணிக வளாகப் பணிகளின் போது மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்த 6 பேர் கைது
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் 10 சதவீதம் மட்டுமே மற்றவர்கள் வெளியே உள்ளனர்: ஆனந்தன்
"தூக்கி விட நினைத்தேன்.. அனால் என் காலை வாரி விட்டார்கள்" - நடிகர் விமல்
தூக்கில் தொங்கிய நிலையில் எஸ்.எஸ்.ஐ சடலமாக மீட்பு.. கண்டித்த மனைவியால் விபரீதம்..?

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement