நடிகை வனிதா குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சூர்யா தேவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், குடும்பத்துடன் மாயமான அவரை மாநகராட்சி அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் தன்னை பற்றி அவதூறாக பேசுவதாக நடிகை வனிதா தந்த புகாரின் அடிப்படையில், சூர்யா தேவி என்பவரை சென்னை வடபழனி மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
வழக்கு விசாரணையின் போது சூர்யா தேவிக்கு கொரோனா பரிசோதனை செய்ததன் முடிவுகள் தற்போது வெளியாகிய நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜாமீனில் வெளிவந்த சூர்யாதேவிக்கு இது குறித்த தகவல் அளிக்க தொடர்பு கொண்ட போது அவர் அழைப்பை துண்டிப்பதாக மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் குடும்பத்துடன் மாயமான நிலையில் அவரின் விருகம்பாக்கம் வீடு மற்றும் சுற்றுவட்டாரங்களில் தேடி வருகின்றனர். சூர்யா தேவியை விசாரித்த வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.