செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

பருத்தி வீரன் பாணியில் விபரீத சம்பவம் செய்த வில்லங்க மாப்பிள்ளை..! 2k கிட்ஸ் எல்லாத்திலும் அவசரமா ?

Oct 10, 2024 07:19:10 PM

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே முறைப்பையனை காதலித்து வந்த கல்லூரி மாணவி ஒருவர், பெற்றோர் எதிர்ப்பால் காதலை கைவிட்ட நிலையில் வீட்டிற்கு பெண் கேட்பது போல சென்ற இளைஞர், மாணவியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது 

சிவகங்கை அருகே மதகுபட்டி மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் மோனிஷா இவர் சிவகங்கையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் படித்து வந்தார், இவரை சிங்கம்புணரி அருகே பிரான்மலையைச் சேர்ந்த மாமன் மகன் ஆகாஷ் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்க்கிடையே ஆகாஷ் வேறு சில பெண்களுடன் சுற்றுவதாக தகவல் தெரியவந்ததால் மோனிஷாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து மோனிஷா , ஆகாஷுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டதாக கூறப்படுகின்றது.

காதலை பிரேக் அப் செய்த தனது முறைப்பெண்ணின் வீடுத்தேடிச்சென்ற ஆகாஷ் , அங்கிருந்த மோனிஷாவின் பெற்றோரிடம் மோனிஷாவை திருமணம் செய்து தரும்படி பெண் கேட்டுள்ளார்.

இதற்கு மோனிஷாவின் பெற்றோர்கள் மறுத்ததால் அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது. பின்னர் சிறிது நேரம் கழித்து காதலியின் வீட்டுக்கு சென்ற ஆகாஷ், மோனிஷாவை நேரில் சந்தித்து தனது காதலை ஏற்றுக்கொள்ளுமாறு மீண்டும் வற்புறுத்தியதாக கூறப்படுகின்றது.

வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது “எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க கூடாது” என்று ஆத்திரப்பட்ட ஆகாஷ், அங்கு கிடந்த அரிவாள்மனையால் மோனிஷாவின் கழுத்தை அறுத்ததாகவும், அருகில் கிடந்த பீர் பாட்டிலை உடைத்து தனது கழுத்தில் குத்தி தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகின்றது.

உடனடியாக இருவரையும் மீட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்ல அருகில் எவரும் இல்லாததால் கழுத்தில் இருந்து அதிக அளவி ரத்தம் வெளியேறியதால் அடுத்த சில நிமிடங்களில் ஒருவர் பின் ஒருவராக இருவருமே பரிதாபமாக பலியானதாக போலீசார் தெரிவித்தனர்.

மதகுபட்டி போலீஸார் இருவரது சடலங்களையும் கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். நினைத்த காதல் கைகூடாத ஆத்திரத்தில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு இரு உயிர்களை காவு வாங்கி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்


Advertisement
கோவிலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் நகைகளை திருடிய பெண்..
பூக்கடை பகுதியில் பல லட்சம் மதிப்புள்ள ஓபியம் போதைப் பொருள் பறிமுதல்.. கடை உரிமையாளருக்கு போலீஸ் வலை..
தூய்மை நகரங்களின் பட்டியலில் சென்னை பின்னுக்கு தள்ளப்பட்டதாக இ.பி.எஸ். கண்டனம்,
செல்லப்பிராணிகளுக்காக ரூ.165 கோடி மதிப்பில் மருத்துவமனை திறந்தவர் ரத்தன் டாடா
ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார்: லதா ரஜினிகாந்த்
இஸ்ரேல் தாக்குதலால் லெபனானில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு... உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
கோவையில் மான்கறியை விற்பனை செய்ய முயன்ற 2 பேரும், ரூ 4000 கொடுத்து வாங்க வந்த 3 பேரும் கைது
கலிபோர்னியா மாகாண காவல்துறை சார்பில் முதல் டெஸ்லா சைபர்ட்ரக் அறிமுகம்
சென்னையில் ஹவாலா பணத்தை போலீஸ் என்று கூறி மிரட்டி பறிமுதல் செய்த 2 பேர் போலீசார் கைது
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார் வயது 86

Advertisement
Posted Oct 10, 2024 in இந்தியா,Big Stories,

தொழில்துறையில் முத்திரை பதித்த ரத்தன் டாடா

Posted Oct 10, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

விமர்சனத்திற்குள்ளாகும் CITU சங்கப்பதிவு போராட்டம்... சங்கம் முக்கியமா? சம்பளம் முக்கியமா? இளைஞர்களின் வாழ்வில் விளையாடும் CITU

Posted Oct 10, 2024 in தமிழ்நாடு,Big Stories,

அதிமுகவை காட்டி பணம் வாங்கிய திருமா... திமுகவிடம் வசூலா? கொளுத்திப்போட்ட சீனிவாசன்.. அபாண்டமான அவதூறு என மறுக்கும் திருமா!

Posted Oct 10, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

குடிகார நண்பரிடம் பைக்கை கொடுத்த பாவத்துக்கு பழுத்தது 24 ஆயிரம் ரூபாய் தண்டம் ..! தவிப்புக்கு ஸ்ரிக்ட் போலீசும் காரணம்

Posted Oct 10, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

சந்து, பொந்தெல்லாம் பணம்... லஞ்சம் வாங்கி குவித்த மனைவி... வீடியோவுடன் அப்ரூவர் கணவர்...


Advertisement