செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வான்சாகசம் காண வந்து குடிநீர் கிடைக்காமல் உயிரை விட்ட 5 பேர்..! யார் பொறுப்பு? மக்கள் ஆதங்கம்

Oct 07, 2024 08:55:00 AM

சென்னை மெரீனாவில் நடந்த வான் சாகசத்தை காண வந்த மக்கள் குடிநீர் கிடைக்காமலும், வெயில் கொடுமையாலும், கூட்ட நெரிசலில் சிக்கியும் ஏராளமானோர் மயக்கமடைந்த நிலையில் 5 பேர் உயிரிழந்தனர்.

சென்னை மெரீனாவில் வான்சாகச நிகழ்ச்சியை கான சென்னையின் பல பகுதிகளில் இருந்தும் காலை 7 மணி முதலே மெரீனாவை நோக்கி மக்கள் வரத்தொடங்கி விட்டனர்

கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு தடை என்பதால் தங்கள் வாகனத்தை விட்டு 2 முதல் 3 கிலோமீட்டர் வரை நடந்தே கடற்கரையை அடைந்தனர்.

காலை 11 மணிக்கு எல்லாம் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கூடியதால் மெரீனா குலுங்கியது

விண்ணதிர நடந்த வான் சாகச நிகழ்ச்சி நடந்து முடிந்ததும் லட்சக்கணக்கான மக்கள் கடற்கரையில் இருந்து சாலைக்கு ஒரே நேரத்தில் வந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசார் எண்ணிக்கையில் குறைவாக காணப்பட்டதால் உதவிக்கு ஆள் இன்றி மக்கள் விழி பிதுங்கி போயினர்

பாதுகாப்பு காரணங்களுக்காக முன் கூட்டியே மெரீனாவில் கடைகள் அப்புறப்படுத்த பட்டதால் தவித்த வாய்க்கு தண்ணீர் கூட வாங்கி குடிக்க இயலவில்லை

ஒரு புறம் உச்சி வெயில், மறுபுறம் கூட்ட நெரிசில் குழந்தைகளுடன் வந்திருந்த பெற்றோர் அவதிக்குள்ளாயினர்

பலருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டது, பலர் மயங்கி விழுந்தனர். 230 பேர் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்தவர்களில் 4 பேர் பலியாகினர் 90 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்

நிகழ்ச்சியை பார்த்து விட்டு வீடு மனைவி மற்றும் குழந்தையுடன் பைக்கில் வீடு திரும்பிய தனியார் நிறுவன ஊழியர் கார்த்திகேயன் மயங்கி விழுந்து பரிதாபமாக பலியானார்

பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்த நிலையில் முறையான ஏற்பாடுகள் செய்யப்படாததால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்

தண்ணீர் இன்றி 5 பேர் உயிரிழந்த நிலையில், மின்சார ரெயில்களில் உயிரை பணயம் வைத்து மக்கள் பயணித்த காட்சிகள் வெளியாகி உள்ளன.

2 லட்சத்துக்கு அதிகமான பயணிகள் ரெயில்களில் பயணித்ததாக கூறப்படுகின்றது.

மெட்ரோ ரெயிலில் 3 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் பலமணி நேரம் நெரிசலுக்கு இடையே பயணித்துள்ளனர்

மாநகர பேருந்துகள் இரு சக்கர வாகனங்கள் , ஆட்டோக்கள், கார்கள் மூலமாக லட்சக்கணக்கான மக்கள் சாலையில் காத்திருந்து தங்கள் வீடு வந்து சேர்ந்ததாக தெரிவித்தனர்.


Advertisement
வெயில் தாக்கம்தான் பாதிப்புகளுக்கு காரணம்.. கூட்ட நெரிசலால் மரணம் ஏற்படவில்லை - அமைச்சர் மா.சு
சென்னையின் வான்பரப்பை அதிர விட்ட விமானப்படை... வீரர்களின் தீரத்தை எடுத்துரைத்த சாகசங்களின் தொகுப்பு..!
"காமராஜரை ஆட்சியில் இருந்து இறக்கியது தமிழர்கள் செய்த வரலாற்றுப் பிழை" - செல்வப் பெருந்தகை
நான்கு நாள் பயணமாக இந்தியா வந்த மாலத்தீவு அதிபர் முய்சு.. பிரதமர் மோடியிடம் நிதி உதவி கேட்க திட்டம்..!
பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு எப்போது? பிரதமர் பங்கேற்பு என தகவல்..!
டிராக்டருக்கான தவணைப் பணத்துடன் தலைமறைவான ஊழியர்… விவசாயி அளித்த புகாரில் ஜான் டீர் நிறுவன மேலாளர் மீது வழக்குப்பதிவு..
தேசிய அளவிலான கோ-கோ போட்டி 12 மாநிலங்களைச் சேர்ந்த கோ-கோ அணிகள் பங்கேற்பு..
தேவாலயத்தின் இடத்தை ஆக்கிரமித்ததாக சிலர் மீது தாக்குதல்.. பாதிக்கப்பட்டவர்கள் புகாரின் பேரில் போலீஸார் விசாரணை..
கோவில் திருவிழாவில் பங்கேற்க விடாமல் ஊரைவிட்டு ஒதுக்கிவைத்ததால் டி.எஸ்.பி.யின் காலில் விழுந்து கதறிய கோவில் நிர்வாகி..
த.வெ.க.- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே கொடிக்கம்பம் நடுவதில் மோதல்..

Advertisement
Posted Oct 07, 2024 in செய்திகள்,சென்னை,Big Stories,

சென்னையின் வான்பரப்பை அதிர விட்ட விமானப்படை... வீரர்களின் தீரத்தை எடுத்துரைத்த சாகசங்களின் தொகுப்பு..!

Posted Oct 06, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஆசையாக அழைத்த மனைவி... கணவனுக்கு காத்திருந்த ஷாக் சடலத்துடன் ஆட்டோ சவாரி..! ராஜதந்திரங்கள் வீணானது எப்படி ?

Posted Oct 06, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வாழ்ந்தால் உன்னோடு மட்டுந்தான் வாழுவேன்.. காதலிக்காக உயிர் தியாகம்..! 2k கிட்ஸின் சீரியஸ் காதல் சோகம்

Posted Oct 04, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

ரெக்கி ஆபரேஷனில் சிக்கிய ஆம்ஸ்ட்ராங்.. 4 ரவுடிகளின் 6 மாத பிளான்.. 4,892 பக்க குற்றப்பத்திரிகை... யானை சாய்க்கப்பட்டதன் திகில் பின்னணி...

Posted Oct 03, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அங்கன்வாடி மையத்தில் தப்பும் தவறுமாக தமிழ் ஆரம்பமே அமர்க்களமா..? என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை


Advertisement