செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

டெல்டாவில் KGF நாகா பாய்..! இரும்புல்லாம் கரும்பு மாதிரி.. “டக்”குன்னு கட் செய்வார்களாம்.! கொள்ளைக்கருவி அமேசானில் ஆர்டர்..!

Sep 24, 2024 10:21:54 PM

அமேசானில் ஹைடிராலிக் கட்டரை ஆர்டர் செய்து வாங்கி , சத்தமில்லாமல் வீடுகளின் பூட்டுக்களையும் லாக்கரையும் வெட்டி நகைப்பணம் கொள்ளையடித்த கர்நாடக கொள்ளையன் தலைமையிலான கும்பலை டெல்டா போலீசார் சுற்றிவளைத்துள்ளனர்.

இரும்பு பூட்டு எல்லாம் இந்த ஹைட்ராலிக் கட்டருக்கு முன்னால் கரும்பு மாதிரி என்று போலீசாரிடம் சிக்கிக் கொண்ட டெல்ராவை கலக்கிய கே.ஜி.எப் நாகா பாயின் கொள்ளை கும்பல் இது தான்..!

தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இரவு நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருடும் சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறியதால் தனிப்படை அமைத்து போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருத்துறைபூண்டியை சேர்ந்த குமரேசன் என்பவரை பிடித்து விசாரணை செய்த போது பெரிய நெட் ஒர்க் அமைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

கன்னியாகுமரியை சேர்ந்த வேல்முருகன். கர்நாடக மாநிலம் கே.ஜி.எப் பகுதியை சேர்ந்த நாகா என்கிற ஸ்கெட்ச் நாகராஜ் ஆகியோருடன் இணைந்து பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்ததால் மூன்று பேரையும் தனிப்படையினர் கைது செய்தனர்.

மூன்று பேரும் சேர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோவிலில் ஐயப்பன் சிலையை திருடி தங்க சிலை என நினைத்து விற்க முயற்சிக்கும் போது மாட்டி கொண்டு தப்பி வந்து பல்வேறு வீடுகளில் கைவரிசை காட்டி வந்ததாக கூறப்படுகின்றது.
மன்னார்குடியில் ஒரு வீட்டில் லாக்கருடன் நகைகளை திருடிச்சென்ற இந்த கும்பல், லாக்கரை உடைத்து தங்க நகைகளை திருடி விட்டு லாக்கரை குளத்தில் வீசி விட்டு சென்றதும் தெரிகிறது. குளத்திற்குள் இறங்கி லாக்கரை போலீசார் மீட்டு கரைக்கு கொண்டு வந்ததனர்.

பூட்டப்பட்ட வீடுகளின் எந்த வகை பூட்டாக இருந்தாலும் அவற்றை சத்தமே இல்லாமல் கட் செய்வதற்காக, அமேசானில் ஆர்டர் செய்து சிறிய அளவிலான ஹைட்ராலிக் கட்டர் ஒன்றை வாங்கி உள்ளனர்.

அதனை பயன்படுத்தி பீரோ, லாக்கர். பூட்டு. இரும்பு கதவு ஆகியவற்ரை எளிதாக வெட்டி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்த போலீசார் இரும்பு கம்பி ஒன்ரை சில வினாடிகளில் கட் செய்து காண்பித்தனர்

கைது செய்யப்பட்ட கே.ஜி.எப்ஃ நாகா, குமரேசன், வேல்முருகன் ஆகிய 3 பேருக்கும் 15 க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்பு உள்ளதாக தெரிவித்த போலீசார் , 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அதிகமாக நகைப்பணத்தை வீட்டில் வைப்பதை தவிர்த்து பாதுகாப்பான வங்கிகளில் வைக்கும்படி அறிவுறுத்தினர்.


Advertisement
தஞ்சை உள்ளிட்ட மாவட்ட வீடுகளில் தொடர் கொள்ளை.. தனிப்படை போலீஸாரால் திருடர்கள் கைது..
துணைவேந்தர் இன்றி சென்னைப் பல்கலை பட்டமளிப்பு விழா
ரேஸ் கிளப் நிலத்தில் புதிதாக நீர் நிலையை உருவாக்கலாம் - பசுமைத் தீர்ப்பாயம்
தமிழகத்தில் கடன் வசூல் தீர்ப்பாயங்கள் செயல்படவில்லை என புகார்.. ஊடகங்களில் செய்திகள் வெளியானாலாவது தீர்வு கிடைக்குமா?-நீதிபதிகள்
புத்தகப்பையில் அரிவாளை எடுத்து வந்த மாணவர்.. தந்தையை அழைத்து டி.சி கொடுத்த பள்ளி நிர்வாகம்
குமரி மாவட்டத்தில் காணாமல் போன 1,000 செல்போன்கள் மீட்பு...
நடிகர் சித்திக்கின் மீது நடிகை அளித்த பாலியல் வன்கொடுமை புகார்..
மாணவர்கள் காலணியுடன்செல்வதால் வகுப்பறை குப்பையாவதாக புகார்.. சுத்தம் செய்த மேயர் சுந்தரி..
100 வருஷம் வாழ்வதும் ஒரு வகையில் சாபம் தானோ..? மனைவியை கொன்ற பெரியவர்..! இந்த நிலை எதிரிக்கும் வரக்கூடாது
பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதாக திரைப்பட இயக்குநர் மோகன் கைது...

Advertisement
Posted Sep 24, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

100 வருஷம் வாழ்வதும் ஒரு வகையில் சாபம் தானோ..? மனைவியை கொன்ற பெரியவர்..! இந்த நிலை எதிரிக்கும் வரக்கூடாது

Posted Sep 23, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரவுடி சீசிங் ராஜா.... சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்..? ஆம்ஸ்ட்ராங் வழக்கில் NO என அறிவிப்பு

Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்


Advertisement